பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்* தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
படு மும்மதப் புனல் சோர வாரணம் பைய* நின்று ஊர்வது போல்*
உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப* உடை மணி பறை கறங்க*
தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி* தளர்நடை நடவானோ
செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்* சிறுபிறை முளைப் போல*
நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே* நளிர் வெண்பல் முளை இலக*
அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட* அனந்தசயனன்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்* சூழ் பரிவேடமுமாய்ப்*
பின்னற் துலங்கும் அரசிலையும்* பீதகச் சிற்றாடையொடும்*
மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்*
தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ
கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்* கணகண சிரித்து உவந்து*
முன் வந்து நின்று முத்தம் தரும்* என் முகில்வண்ணன் திருமார்வன்*
தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே* தளர்நடை நடவானோ
முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்* மொடுமொடு விரைந்து ஓடப்*
பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்* பெயர்ந்து அடியிடுவது போல்*
பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்* பலதேவன் என்னும்*
தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ
ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்* உள்ளடி பொறித்து அமைந்த*
இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்* இலச்சினை பட நடந்து*
பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்* பின்னையும் பெய்து பெய்து*
தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை* தளர்நடை நடவானோ
படர் பங்கைய மலர்வாய் நெகிழப்* பனி படு சிறுதுளி போல்*
இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி* இற்று இற்று வீழநின்று*
கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்* உடை மணி கணகணென*
தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி* தளர்நடை நடவானோ
பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே* அருவிகள் பகர்ந்தனைய*
அக்குவடம் இழிந்து ஏறித் தாழ* அணி அல்குல் புடை பெயர*
மக்கள் உலகினிற் பெய்து அறியா* மணிக் குழவி உருவின்*
தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்* தளர்நடை நடவானோ
வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்* வேழத்தின் கருங்கன்று போல்*
தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்* சிறு புகர்பட வியர்த்து*
ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்* உறைத்து ஒன்றும் நோவாமே*
தண் போது கொண்ட தவிசின் மீதே* தளர்நடை நடவானோ
திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்* செங்கண்மால் கேசவன்* தன்-
திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி* திகழ்ந்து எங்கும் புடைபெயர*
பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்* பெரியதோர் தீர்த்த பலம்-
தரு நீர்ச்* சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்* தளர்நடை நடவானோ
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய* அஞ்சனவண்ணன் தன்னைத்*
தாயர் மகிழ ஒன்னார் தளரத்* தளர்நடை நடந்ததனை*
வேயர் புகழ் விட்டுசித்தன்* சீரால் விரித்தன உரைக்கவல்லார்*
மாயன் மணிவண்ணன் தாள் பணியும்* மக்களைப் பெறுவர்களே* (2)
கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த* கோவலன் எம் பிரான்
சங்கு தங்கு தடங் கடல்* துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*
பொங்கு புள்ளினை வாய் பிளந்த* புராணர் தம் இடம்*
பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்* இரங்க வன் பேய் முலை*
பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*
வெள்ளியான் கரியான்* மணி நிற வண்ணன் என்று எண்ணி*
நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
நின்ற மா மருது இற்று வீழ* நடந்த நின்மலன் நேமியான்*
என்றும் வானவர் கைதொழும்* இணைத் தாமரை அடி எம் பிரான்*
கன்றி மாரி பொழிந்திட* கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்*
சென்று குன்றம் எடுத்தவன்* திரு வேங்கடம் அடை நெஞ்சமே!
பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு* வென்ற பரஞ்சுடர்*
கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*
ஏத்துவார் தம் மனத்து உள்ளான்* இட வெந்தை மேவிய எம் பிரான்*
தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
வண் கையான் அவுணர்க்கு நாயகன்* வேள்வியில் சென்று மாணியாய்*
மண் கையால் இரந்தான்* மராமரம் ஏழும் எய்த வலத்தினான்*
எண் கையான் இமயத்து உள்ளான்* இருஞ்சோலை மேவிய எம் பிரான்*
திண் கை மா துயர் தீர்த்தவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி* பொன் வயிற்றில் பெய்து*
பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்* பால் மதிக்கு இடர் தீர்த்தவன்*
ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்* ஒள் எயிற்றொடு*
திண் திறல் அரியாயவன்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பாரும் நீர் எரி காற்றினோடு* ஆகாசமும் இவை ஆயினான்*
பேரும் ஆயிரம் பேச நின்ற* பிறப்பிலி பெருகும் இடம்*
காரும் வார் பனி நீள் விசும்பிடைச்* சோரும் மா முகில் தோய்தர*
சேரும் வார் பொழில் சூழ்* எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!
அம்பரம் அனல் கால் நிலம் சலம்* ஆகி நின்ற அமரர்கோன்*
வம்பு உலாம் மலர்மேல்* மலி மட மங்கை தன் கொழுநன்அவன்*
கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்* நீள் இதணம்தொறும்*
செம் புனம் அவை காவல் கொள்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!
பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்* சொலி நின்று பின்னரும்*
பேசுவார்தமை உய்ய வாங்கி* பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*
வாச மா மலர் நாறு வார் பொழில்* சூழ் தரும் உலகுக்கு எலாம்*
தேசமாய்த் திகழும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)
செங் கயல் திளைக்கும் சுனைத்* திருவேங்கடத்து உறை செல்வனை*
மங்கையர் தலைவன் கலிகன்றி* வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்*
சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்* தஞ்சமதாகவே*
வங்க மா கடல் வையம் காவலர் ஆகி* வான்உலகு ஆள்வரே!
ஓடும் புள் ஏறி,* சூடும் தண் துழாய்,*
நீடு நின்றவை,* ஆடும் அம்மானே.
அம்மானாய்ப் பின்னும்,* எம்மாண்பும் ஆனான்,*
வெம் மா வாய் கீண்ட,* செம்மா கண்ணனே.
கண் ஆவான் என்றும்,* மண்ணோர் விண்ணோர்க்கு,*
தண் ஆர் வேங்கட,* விண்ணோர் வெற்பனே.
வெற்பை ஒன்று எடுத்து,* ஒற்கம் இன்றியே,*
நிற்கும் அம்மான் சீர்,* கற்பன் வைகலே.
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய்கலந்தானே.
கலந்து என் ஆவி,* நலம்கொள்நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம்கொண்டானே.
கொண்டான் ஏழ் விடை,* உண்டான் ஏழ்வையம்,*
தண் தாமம் செய்து,* என் எண்தானானானே.
ஆனான் ஆன் ஆயன்,* மீனோடேனமும்;*
தான் ஆனான் என்னில்,* தானாயசங்கே.
சங்கு சக்கரம்,* அங்கையில் கொண்டான்,*
எங்கும் தானாய,* நங்கள் நாதனே.
நாதன்ஞாலம்கொள்* பாதன், என்னம்மான்,*
ஓதம்போல்கிளர்,* வேதநீரனே.
நீர்புரைவண்ணன்,* சீர்சடகோபன்,*
நேர்தல் ஆயிரத்து,* ஓர்தல்இவையே.