பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    தொடர் சங்கிலிகை சலார்-பிலார் என்னத்*  தூங்கு பொன்மணி ஒலிப்பப்*
    படு மும்மதப் புனல் சோர வாரணம்  பைய*  நின்று ஊர்வது போல்* 

    உடன் கூடிக் கிண்கிணி ஆரவாரிப்ப*  உடை மணி பறை கறங்க* 
    தடந் தாளிணை கொண்டு சார்ங்கபாணி*  தளர்நடை நடவானோ    
      


    செக்கரிடை நுனிக்கொம்பிற் தோன்றும்*   சிறுபிறை முளைப் போல* 
    நக்க செந் துவர்வாய்த் திண்ணை மீதே*   நளிர் வெண்பல் முளை இலக* 

    அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி  பூண்ட*  அனந்தசயனன்* 
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ


    மின்னுக் கொடியும் ஓர் வெண் திங்களும்*  சூழ் பரிவேடமுமாய்ப்* 
    பின்னற் துலங்கும் அரசிலையும்*  பீதகச் சிற்றாடையொடும்* 

    மின்னிற் பொலிந்த ஓர் கார்முகில் போலக்* கழுத்தினிற் காறையொடும்* 
    தன்னிற் பொலிந்த இருடிகேசன்* தளர்நடை நடவானோ    


     
    கன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்*  கணகண சிரித்து உவந்து* 
    முன் வந்து நின்று முத்தம் தரும்*  என் முகில்வண்ணன் திருமார்வன்* 

    தன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம் தந்து* என்னைத் தளிர்ப்பிக்கின்றான்*
    தன் எற்று மாற்றலர் தலைகள் மீதே*  தளர்நடை நடவானோ    


    முன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்*   மொடுமொடு விரைந்து ஓடப்* 
    பின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்*  பெயர்ந்து அடியிடுவது போல்* 

     பன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்*   பலதேவன் என்னும்* 
    தன் நம்பி ஓடப் பின் கூடச் செல்வான்* தளர்நடை நடவானோ 


    ஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்*  உள்ளடி பொறித்து அமைந்த* 
    இரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்*  இலச்சினை பட நடந்து* 

    பெருகாநின்ற இன்ப-வெள்ளத்தின்மேல்*  பின்னையும் பெய்து பெய்து* 
    தரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை*  தளர்நடை நடவானோ     


    படர் பங்கைய மலர்வாய் நெகிழப்*  பனி படு சிறுதுளி போல்* 
    இடங் கொண்ட செவ்வாய் ஊறி ஊறி*  இற்று இற்று வீழநின்று* 

    கடுஞ் சேக் கழுத்தின் மணிக்குரல் போல்*  உடை மணி கணகணென* 
    தடந் தாளிணை கொண்டு சாரங்கபாணி*  தளர்நடை நடவானோ   


    பக்கம் கருஞ் சிறுப்பாறை மீதே*  அருவிகள் பகர்ந்தனைய* 
    அக்குவடம் இழிந்து ஏறித் தாழ*  அணி அல்குல் புடை பெயர* 

    மக்கள் உலகினிற் பெய்து அறியா*  மணிக் குழவி உருவின்*
    தக்க மா மணிவண்ணன் வாசுதேவன்*  தளர்நடை நடவானோ     


    வெண் புழுதி மேற் பெய்துகொண்டு அளைந்தது ஓர்*  வேழத்தின் கருங்கன்று போல்* 
    தெண் புழுதியாடி திரிவிக்கிரமன்*  சிறு புகர்பட வியர்த்து* 

    ஒண் போது அலர்கமலச் சிறுக்கால்*  உறைத்து ஒன்றும் நோவாமே* 
    தண் போது கொண்ட தவிசின் மீதே*  தளர்நடை நடவானோ    


    திரை நீர்ச் சந்திர மண்டலம் போலச்*  செங்கண்மால் கேசவன்*  தன்- 
    திரு நீர் முகத்துத் துலங்கு சுட்டி*  திகழ்ந்து எங்கும் புடைபெயர* 

    பெரு நீர்த் திரை எழு கங்கையிலும்*  பெரியதோர் தீர்த்த பலம்- 
    தரு நீர்ச்*  சிறுச்சண்ணம் துள்ளம் சோரத்*  தளர்நடை நடவானோ


    ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய*  அஞ்சனவண்ணன் தன்னைத்* 
    தாயர் மகிழ ஒன்னார் தளரத்*   தளர்நடை நடந்ததனை*   

    வேயர் புகழ் விட்டுசித்தன்*  சீரால் விரித்தன உரைக்கவல்லார்* 
    மாயன் மணிவண்ணன் தாள் பணியும்*  மக்களைப் பெறுவர்களே* (2)


    கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
    சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*

    பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
    பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
    பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*

    வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
    நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 


    நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
    என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 

    கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
    சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   


    பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
    கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

    ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
    தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   


    வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
    மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 

    எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
    திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        


    எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
    பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 

    ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
    திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 


    பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
    பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 

    காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
    சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
    வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 

    கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
    செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


    பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
    பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*

    வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
    தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)


    செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
    மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 

    சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
    வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   


    ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*

    நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.


    அம்மானாய்ப் பின்னும்,*  எம்மாண்பும் ஆனான்,*

    வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே.


    கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*

    தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.


    வெற்பை ஒன்று எடுத்து,*  ஒற்கம் இன்றியே,*

    நிற்கும் அம்மான் சீர்,*  கற்பன் வைகலே.


    வைகலும் வெண்ணெய்,*  கைகலந்து உண்டான்,* 

    பொய் கலவாது,*  என்  மெய்கலந்தானே.


    கலந்து என் ஆவி,*  நலம்கொள்நாதன்,* 

    புலன் கொள் மாணாய்,*  நிலம்கொண்டானே.


    கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ்வையம்,*

    தண் தாமம் செய்து,*  என் எண்தானானானே.


    ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடேனமும்;* 

    தான் ஆனான் என்னில்,*  தானாயசங்கே.


    சங்கு சக்கரம்,*  அங்கையில் கொண்டான்,*

    எங்கும் தானாய,*  நங்கள் நாதனே.


    நாதன்ஞாலம்கொள்*  பாதன், என்ம்மான்,*

    ஓதம்போல்கிளர்,*   வேதநீரனே.


    நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*

    நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.