பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
தந்தை தாய் மக்களே* சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
பந்தம்ஆர் வாழ்க்கையை* நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
அந்தம்ஆய் ஆதிஆய்* ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
மைந்தனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!. (2)
மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற* நுண்இடை நுடங்கும்,*
அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி* முன் தூது சென்ற*
மன்னனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பூண்உலாம் மென்முலைப் பாவைமார்* பொய்யினை 'மெய் இது' என்று,*
பேணுவார் பேசும் அப்பேச்சை* நீ பிழை எனக் கருதினாயேல்,*
நீள்நிலா வெண்குடை வாணனார்* வேள்வியில் மண் இரந்த,*
மாணியார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
பண்உலாம் மென்மொழிப் பாவைமார்* பணைமுலை அணைதும் நாம்என்று*
எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து* நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற* வேங்கடத்துஉளார்,* வளங்கொள் முந்நீர்-
வண்ணனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்* வாரணம் சூழ வாழ்ந்தார்,*
துஞ்சினார் என்பதுஓர் சொல்லை* நீ துயர்எனக் கருதினாயேல்,*
நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து* அவள் நாளை உண்ட,-
மஞ்சனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
உருவின்ஆர் பிறவிசேர்* ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு*
அருவிநோய் செய்துநின்று* ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ* வேள்வியோடு அங்கம் ஆறும்,*
மருவினார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை* மெய்எனக் கொண்டு,* வாளா-
பேயர்தாம் பேசும் அப்பேச்சை* நீ பிழைஎனக் கருதினாயேல்,*
தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்* மங்குல் வான்ஆகி நின்ற,*
மாயனார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மஞ்சுசேர் வான்எரி* நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
அஞ்சுசேர் ஆக்கையை* அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
சந்துசேர் மென்முலைப்* பொன்மலர்ப் பாவையும் தாமும்,* நாளும்-
வந்துசேர் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
வெள்ளியார் பிண்டியார் போதியார்* என்றுஇவர் ஓது கின்ற,*
கள்ளநூல் தன்னையும்* கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
தெள்ளியார் கைதொழும் தேவனார்* மாமுநீர் அமுது தந்த,*
வள்ளலார் வல்லவாழ்* சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!
மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்* வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்* கோலநீள்ஆலி நாடன்,*
கறைஉலாம் வேல்வல* கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு* இன்பம் நன்கு எய்துவாரே. (2)
எம்கானல் அகம்கழிவாய்* இரை தேர்ந்துஇங்கு இனிதுஅமரும்*
செங்கால மடநாராய்!* திருமூழிக்களத்து உறையும்*
கொங்குஆர் பூந்துழாய்முடி* எம்குடக்கூத்தர்க்கு என்தூதாய்*
நும்கால்கள் என்தலைமேல்* கெழுமீரோ நுமரோடே. (2)
நுமரோடும் பிரியாதே* நீரும் நும் சேவலுமாய்*
அமர்காதல் குருகுஇனங்காள்! அணி மூழிக்களத்து உறையும்*
எமராலும் பழிப்புண்டு* இங்கு என்தம்மால் இழிப்புண்டு*
தமரோடுஅங்கு உறைவார்க்குத்* தக்கிலமே! கேளீரே.
தக்கிலமே கேளீர்கள்* தடம்புனல்வாய் இரைதேரும்*
கொக்குஇனங்காள்! குருகுஇனங்காள்!* குளிர் மூழிக்களத்து உறையும்*
செக்கமலத்துஅலர் போலும்* கண்கைகால் செங்கனிவாய்*
அக்கமலத்துஇலைப்போலும்* திருமேனி அடிகளுக்கே.
திருமேனி அடிகளுக்குத்* தீவினையேன் விடுதூதாய்*
திருமூழிக்களம் என்னும்* செழுநகர்வாய் அணிமுகில்காள்*
திருமேனி அவட்குஅருளீர்* என்றக்கால் உம்மைத்தன்*
திருமேனி ஒளிஅகற்றி* தெளிவிசும்பு கடியுமே?
தெளிவிசும்பு கடிதுஓடி* தீவளைத்து மின்இலகும்*
ஒளிமுகில்காள்!* திருமூழிக்களத்துஉறையும் ஒண்சுடர்க்கு*
தெளிவிசும்பு திருநாடாத்* தீவினையேன் மனத்துஉறையும்*
துளிவார்கள்குழலார்க்கு* என்தூதுஉரைத்தல் செப்புமினே.
தூதுஉரைத்தல் செப்புமின்கள்* தூமொழிவாய் வண்டுஇனங்காள்*
போதுஇரைத்து மதுநுகரும்* பொழில் மூழிக்களத்துஉறையும்*
மாதரைத்தம் மார்வகத்தே* வைத்தார்க்கு என்வாய்மாற்றம்*
தூதுஉரைத்தல் செப்புதிரேல்* சுடர்வளையும் கலையுமே.
சுடர்வளையும் கலையும்கொண்டு* அருவினையேன் தோள்துறந்த*
படர்புகழான்* திருமூழிக்களத்துஉறையும் பங்கயக்கண்*
சுடர்பவள வாயனைக்கண்டு* ஒருநாள் ஓர்தூய்மாற்றம்*
படர்பொழில்வாய்க் குருகுஇனங்காள்!* எனக்கு ஒன்று பணியீரே.
எனக்குஒன்று பணியீர்கள்* இரும்பொழில்வாய் இரைதேர்ந்து*
மனக்குஇன்பம் படமேவும்* வண்டுஇனங்காள்! தும்பிகாள்*
கனக்கொள் திண்மதிள்புடைசூழ்* திருமூழிக் களத்துஉறையும்*
புனக்கொள் காயாமேனிப்* பூந்துழாய் முடியார்க்கே.
பூந்துழாய் முடியார்க்கு* பொன்ஆழிக் கையாருக்கு*
ஏந்துநீர் இளம்குருகே!* திருமூழிக்களத்தாருக்கு*
ஏந்துபூண் முலைபயந்து* என்இணைமலர்க்கண் நீர்ததும்ப*
தாம்தம்மைக் கொண்டுஅகல்தல்* தகவுஅன்றுஎன்று உரையீரே
தகவுஅன்றுஎன்று உரையீர்கள்* தடம்புனல்வாய் இரைதேர்ந்து*
மிகஇன்பம் படமேவும்* மேல்நடைய அன்னங்காள்*
மிகமேனி மெலிவுஎய்தி* மேகலையும் ஈடுஅழிந்து* என்
அகமேனி ஒழியாமே* திருமூழிக் களத்தார்க்கே.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை*
ஒழிவுஇல்லா அணிமழலைக்* கிளிமொழியாள் அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச்* சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும்* நோய் அறுக்குமே (2)