பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
    குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*

    நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
    கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)


    இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
    துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*

    மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
    கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
    மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*

    முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
    கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
    போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-

    கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
    காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)


    தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
    அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*

    விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
    கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.


    மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
    தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*

    கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
    எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  


    பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
    எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*

    சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
    கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      


    படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
    கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*

    முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
    கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே


    புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
    நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*

    வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
    கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 


    மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
    வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*

    கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
    ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)


    இருத்தும் வியந்து என்னைத்*  தன் பொன்அடிக்கீழ் என்று* 
    அருத்தித்து எனைத்துஓர்*  பலநாள் அழைத்தேற்கு*

    பொருத்தம்உடை*  வாமனன்தான் புகுந்து*  என்தன் 
    கருத்தைஉற*  வீற்றிருந்தான் கண்டுகொண்டே.       (2)


    இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
    திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*

    பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
    தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)


    அருள்தான் இனியான் அறியேன்*  அவன்என்உள்* 
    இருள்தான்அற*  வீற்றிருந்தான் இதுஅல்லால்*

    பொருள் தான்எனில்*  மூவுலகும் பொருளல்ல* 
    மருள்தான் ஈதோ?* மாயமயக்கு மயக்கே.


    மாயமயக்கு மயக்கான்*  என்னை வஞ்சித்து* 
    ஆயன் அமரர்க்கு*  அரிஏறு எனதுஅம்மான்*     

    தூய சுடர்ச்சோதி*  தனதுஎன்னுள் வைத்தான்* 
    தேசம் திகழும்*  தன்திருவருள் செய்தே.      


    திகழும்தன் திருவருள் செய்து*  உலகத்தார்- 
    புகழும் புகழ்*  தானதுகாட்டித் தந்து என்உள்-

    திகழும்*  மணிக்குன்றம்ஒன்றே ஒத்துநின்றான்* 
    புகழும் புகழ்*  மற்றுஎனக்கும் ஓர்பொருளே? 


    பொருள்மற்றுஎனக்கும் ஓர்பொருள்தன்னில்*  சீர்க்கத் 
    தருமேல்*  பின்னையார்க்குஅவன் தன்னைக் கொடுக்கும்?*

    கருமாணிக்கக் குன்றத்துத்*  தாமரைபோல்* 
    திருமார்பு கால்கண்கை*  செவ்வாய் உந்தியானே.   


    செவ்வாய்உந்தி*  வெண்பல் சுடர்க்குழை தம்மோடு* 
    எவ்வாய்ச் சுடரும்*  தம்மில்முன்வளாய்க் கொள்ள*

    செவ்வாய் முறுவலோடு*  எனதுஉள்ளத்துஇருந்த* 
    அவ்வாயன்றி*  யான் அறியேன் மற்றுஅருளே.


    அறியேன் மற்றருள்*  என்னைஆளும் பிரானார்* 
    வெறிதே அருள்செய்வர்*  செய்வார்கட்கு உகந்து*

    சிறியேனுடைச்*  சிந்தையுள் மூவுலகும்*  தன் 
    நெறியா வயிற்றில்கொண்டு*  நின்றொழிந்தாரே. 


    வயிற்றில் கொண்டு*  நின்றொழிந்தாரும் எவரும்* 
    வயிற்றில் கொண்டு*  நின்று ஒருமூவுலகும்* தம்

    வயிற்றில் கொண்டு*  நின்றவண்ணம் நின்றமாலை* 
    வயிற்றில் கொண்டு*  மன்னவைத்தேன் மதியாலே.  


    வைத்தேன் மதியால்*  எனதுஉள்ளத்துஅகத்தே* 
    எய்த்தே ஒழிவேன்அல்லேன்*  என்றும் எப்போதும்*

    மொய்த்துஏய்திரை*  மோது தண்பாற் கடலுளால்* 
    பைத்துஏய் சுடர்ப்பாம்பணை*  நம்பரனையே  


    சுடர்ப்பாம்பணை நம்பரனை*  திருமாலை* 
    அடிச்சேர்வகை*  வண்குருகூர்ச் சடகோபன்*

    முடிப்பான் சொன்னஆயிரத்து*  இப்பத்தும் சன்மம் 
    விடத்*  தேய்ந்தற நோக்கும்*  தன்கண்கள் சிவந்தே  (2)