பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப* மருங்கின் மேல்*
ஆணிப் பொன்னாற் செய்த* ஆய்பொன் உடை மணி*
பேணி பவளவாய்* முத்துஇலங்க* பண்டு-
காணி கொண்ட கைகளால் சப்பாணி*
கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)
பொன் அரைநாணொடு* மாணிக்கக் கிண்கிணி*
தன் அரை ஆட* தனிச் சுட்டி தாழ்ந்து ஆட*
என் அரை மேல்நின்று இழிந்து* உங்கள் ஆயர்தம்*
மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி*
மாயவனே* கொட்டாய் சப்பாணி
பல் மணி முத்து* இன்பவளம் பதித்தன்ன*
என் மணிவண்ணன்* இலங்கு பொற் தோட்டின் மேல்*
நின் மணிவாய் முத்து இலங்க* நின் அம்மைதன்*
அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
ஆழியங் கையனே சப்பாணி
தூ நிலாமுற்றத்தே* போந்து விளையாட*
வான் நிலா அம்புலீ* சந்திரா! வா என்று*
நீ நிலா நிற் புகழாநின்ற* ஆயர்தம்*
கோ நிலாவ கொட்டாய் சப்பாணி*
குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.
புட்டியிற் சேறும்* புழுதியும் கொண்டுவந்து*
அட்டி அமுக்கி* அகம் புக்கு அறியாமே*
சட்டித் தயிரும்* தடாவினில் வெண்ணெயும் உண்*
பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி*
பற்பநாபா! கொட்டாய் சப்பாணி.
தாரித்து நூற்றுவர்* தந்தை சொற் கொள்ளாது*
போர் உய்த்து வந்து* புகுந்தவர் மண் ஆளப்*
பாரித்த மன்னர் படப்* பஞ்சவர்க்கு* அன்று-
தேர் உய்த்த கைகளால் சப்பாணி*
தேவகி சிங்கமே! சப்பாணி
பரந்திட்டு நின்ற* படுகடல் தன்னை*
இரந்திட்ட கைம்மேல்* எறிதிரை மோதக்*
கரந்திட்டு நின்ற* கடலைக் கலங்கச்*
சரந் தொட்ட கைகளால் சப்பாணி*
சார்ங்க விற்கையனே! சப்பாணி.
குரக்கு இனத்தாலே* குரைகடல் தன்னை*
நெருக்கி அணை கட்டி* நீள் நீர் இலங்கை*
அரக்கர் அவிய* அடு கணையாலே*
நெருக்கிய கைகளால் சப்பாணி*
நேமியங் கையனே! சப்பாணி.
அளந்து இட்ட தூணை* அவன் தட்ட* ஆங்கே-
வளர்ந்திட்டு* வாள் உகிர்ச் சிங்க உருவாய்*
உளந் தொட்டு இரணியன்* ஒண்மார்வு அகலம்*
பிளந்திட்ட கைகளால் சப்பாணி*
பேய் முலை உண்டானே! சப்பாணி.
அடைந்திட்டு அமரர்கள்* ஆழ்கடல் தன்னை*
மிடைந்திட்டு மந்தரம்* மத்தாக நாட்டி*
வடம் சுற்றி* வாசுகி வன்கயிறு ஆகக்*
கடைந்திட்ட கைகளால் சப்பாணி*
கார்முகில் வண்ணனே! சப்பாணி
ஆட்கொள்ளத் தோன்றிய* ஆயர்தம் கோவினை*
நாட்கமழ் பூம்பொழில்* வில்லிபுத்தூர்ப் பட்டன்*
வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்*
வேட்கையினால் சொல்லுவார்* வினை போதுமே (2)
அம் கண் ஞாலம் அஞ்ச* அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு* பத்திமையால்*
அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிங்கவேழ்குன்றமே. (2)
அலைத்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த* கூர் உகிராளன் இடம்*
மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்* வன் துடி வாய் கடுப்ப*
சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத* சிங்கவேழ்குன்றமே.
ஏய்ந்த பேழ் வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்* அன்றியும் நின்று அழலால்*
தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்* சிங்கவேழ்குன்றமே.
எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்* ஏதலன் இன் உயிரை வவ்வி*
ஆகம் வள் உகிரால்* வகிர்ந்த அம்மானது இடம்*
கவ்வும் நாயும் கழுகும்* உச்சிப்போதொடு கால் சுழன்று*
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
மென்ற பேழ்வாய்* வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்* போழ்ந்த புனிதன் இடம்*
நின்ற செந்தீ மொண்டு சூறை* நீள் விசும்பூடு இரிய*
சென்று காண்டற்கு அரிய கோயில்* சிங்கவேழ்குன்றமே.
எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்* எயிற்றொடு இது எவ் உரு என்று*
இரிந்து வானோர் கலங்கி ஓட* இருந்த அம்மானது இடம்*
நெரிந்த வேயின் முழையுள் நின்று* நீள் நெறிவாய் உழுழை*
திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்* சிங்கவேழ்குன்றமே.
முனைத்த சீற்றம் விண் சுடப் போய்* மூவுலகும் பிறவும்*
அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
கனைத்த தீயும் கல்லும் அல்லா* வில் உடை வேடரும் ஆய்*
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்* சிங்கவேழ்குன்றமே.
நாத் தழும்ப நாஅன்முகனும்* ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
அங்கு ஓர் ஆள் அரி ஆய்* இருந்த அம்மானது இடம்*
காய்த்த வாகை நெற்று ஒலிப்ப* கல் அதர் வேய்ங்கழை போய்த்*
தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.
நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்* நம்முடை நம் பெருமான்*
அல்லிமாதர் புல்க நின்ற* ஆயிரந் தோளன் இடம்,
நெல்லி மல்கி கல் உடைப்ப* புல் இலை ஆர்த்து*
அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத* சிங்கவேழ்குன்றமே.
செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்* சிஙக்வேழ்குன்று உடைய*
எங்கள் ஈசன் எம் பிரானை* இருந் தமிழ் நூல்புலவன்*
மங்கை ஆளன் மன்னு தொல் சீர்* வண்டு அரை தார்க் கலியன்*
செங்கையாளன் செஞ்சொல் மாலை* வல்லவர் தீது இலரே. (2)
பிறவித்துயர் அற* ஞானத்துள் நின்று.*
துறவிச் சுடர் விளக்கம்* தலைப்பெய்வார்,*
அறவனை* ஆழிப்படை அந்தணனை,*
மறவியை இன்றி* மனத்து வைப்பாரே.
வைப்பாம் மருந்து ஆம்* அடியரை வல்வினைத்*
துப்பாம் புலன் ஐந்தும்* துஞ்சக்கொடான் அவன்,*
எப்பால் எவர்க்கும்* நலத்தால் உயர்ந்து உயர்ந்து,*
அப்பாலவன் எங்கள்* ஆயர் கொழுந்தே.
ஆயர் கொழுந்தாய்* அவரால் புடையுண்ணும்,*
மாயப் பிரானை* என் மாணிக்கச் சோதியை,*
தூய அமுதைப்* பருகிப் பருகி,* என்-
மாயப் பிறவி* மயர்வு அறுத்தேனே.
மயர்வு அற என் மனத்தே* மன்னினான் தன்னை,*
உயர்வினையே தரும்* ஒண் சுடர்க் கற்றையை,*
அயர்வு இல் அமரர்கள்,* ஆதிக் கொழுந்தை,* என்
இசைவினை* என் சொல்லி யான் விடுவேனோ?
விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,*
நடுவே வந்து* உய்யக் கொள்கின்ற நாதனை,*
தொடுவே செய்து* இள ஆய்ச்சியர் கண்ணினுள்,*
விடவே செய்து* விழிக்கும் பிரானையே.
பிரான்* பெரு நிலம் கீண்டவன்,* பின்னும்
விராய்* மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*
மராமரம் எய்த மாயவன்,* என்னுள்
இரான் எனில்* பின்னை யான் ஒட்டுவேனோ?
யான் ஒட்டி என்னுள்* இருத்துவன் என்றிலன்,*
தான் ஒட்டி வந்து* என் தனி நெஞ்சை வஞ்சித்து,*
ஊன் ஒட்டி நின்று* என் உயிரில் கலந்து,* இயல்
வான் ஒட்டுமோ?* இனி என்னை நெகிழ்க்கவே.
என்னை நெகிழ்க்கிலும்* என்னுடை நன் நெஞ்சம்-
தன்னை,* அகல்விக்கத் தானும்* கில்லான் இனி,*
பின்னை நெடும் பணைத் தோள்* மகிழ் பீடு உடை,*
முன்னை அமரர்* முழுமுதல் தானே.
அமரர் முழுமுதல்* ஆகிய ஆதியை,*
அமரர்க்கு அமுது ஈந்த* ஆயர் கொழுந்தை,*
அமர அழும்பத்* துழாவி என் ஆவி,*
அமரத் தழுவிற்று* இனி அகலும்மோ.
அகலில் அகலும்* அணுகில் அணுகும்,*
புகலும் அரியன்* பொரு அல்லன் எம்மான்,*
நிகர் இல் அவன் புகழ்* பாடி இளைப்பு இலம்,*
பகலும் இரவும்* படிந்து குடைந்தே.
குடைந்து வண்டு உண்ணும்* துழாய் முடியானை,*
அடைந்த தென் குருகூர்ச்* சடகோபன்,*
மிடைந்த சொல் தொடை* ஆயிரத்து இப்பத்து,*
உடைந்து நோய்களை* ஓடுவிக்குமே.