பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    மாணிக்கக் கிண்கிணி ஆர்ப்ப*  மருங்கின் மேல்* 
    ஆணிப் பொன்னாற் செய்த*  ஆய்பொன் உடை மணி* 

    பேணி பவளவாய்*  முத்துஇலங்க*  பண்டு- 
    காணி கொண்ட கைகளால் சப்பாணி* 
    கருங்குழற் குட்டனே! சப்பாணி. (2)  


    பொன் அரைநாணொடு*  மாணிக்கக் கிண்கிணி* 
    தன் அரை ஆட*  தனிச் சுட்டி தாழ்ந்து ஆட* 

    என் அரை மேல்நின்று இழிந்து*  உங்கள் ஆயர்தம்*   
    மன் அரைமேல் கொட்டாய் சப்பாணி* 
    மாயவனே*  கொட்டாய் சப்பாணி  


    பல் மணி முத்து*  இன்பவளம் பதித்தன்ன* 
    என் மணிவண்ணன்*  இலங்கு பொற் தோட்டின் மேல்* 

    நின் மணிவாய் முத்து இலங்க*  நின் அம்மைதன்* 
    அம்மணி மேல் கொட்டாய் சப்பாணி*
    ஆழியங் கையனே சப்பாணி      


    தூ நிலாமுற்றத்தே*  போந்து விளையாட* 
    வான் நிலா அம்புலீ*  சந்திரா! வா என்று*

    நீ நிலா நிற் புகழாநின்ற*  ஆயர்தம்* 
    கோ நிலாவ கொட்டாய் சப்பாணி* 
    குடந்தைக் கிடந்தானே! சப்பாணி.  


    புட்டியிற் சேறும்*  புழுதியும் கொண்டுவந்து* 
    அட்டி அமுக்கி*  அகம் புக்கு அறியாமே* 

    சட்டித் தயிரும்*  தடாவினில் வெண்ணெயும் உண்* 
    பட்டிக் கன்றே! கொட்டாய் சப்பாணி* 
    பற்பநாபா! கொட்டாய் சப்பாணி. 


    தாரித்து நூற்றுவர்*  தந்தை சொற் கொள்ளாது* 
    போர் உய்த்து வந்து*  புகுந்தவர் மண் ஆளப்* 

    பாரித்த மன்னர் படப்*  பஞ்சவர்க்கு*  அன்று- 
    தேர் உய்த்த கைகளால் சப்பாணி* 
    தேவகி சிங்கமே! சப்பாணி       


    பரந்திட்டு நின்ற*  படுகடல் தன்னை* 
    இரந்திட்ட கைம்மேல்*  எறிதிரை மோதக்* 

    கரந்திட்டு நின்ற*  கடலைக் கலங்கச்* 
    சரந் தொட்ட கைகளால் சப்பாணி* 
    சார்ங்க விற்கையனே! சப்பாணி.  


    குரக்கு இனத்தாலே*  குரைகடல் தன்னை* 
    நெருக்கி அணை கட்டி*  நீள் நீர் இலங்கை*

    அரக்கர் அவிய*  அடு கணையாலே* 
    நெருக்கிய கைகளால் சப்பாணி* 
    நேமியங் கையனே! சப்பாணி.  


    அளந்து இட்ட தூணை*  அவன் தட்ட* ஆங்கே- 
    வளர்ந்திட்டு*  வாள் உகிர்ச் சிங்க உருவாய்*

    உளந் தொட்டு இரணியன்*  ஒண்மார்வு அகலம்* 
    பிளந்திட்ட கைகளால் சப்பாணி*  
    பேய் முலை உண்டானே! சப்பாணி.


    அடைந்திட்டு அமரர்கள்*  ஆழ்கடல் தன்னை* 
    மிடைந்திட்டு மந்தரம்*  மத்தாக நாட்டி* 

    வடம் சுற்றி*  வாசுகி வன்கயிறு ஆகக்* 
    கடைந்திட்ட கைகளால் சப்பாணி* 
    கார்முகில் வண்ணனே! சப்பாணி    


    ஆட்கொள்ளத் தோன்றிய*  ஆயர்தம் கோவினை* 
    நாட்கமழ் பூம்பொழில்*  வில்லிபுத்தூர்ப் பட்டன்* 

    வேட்கையால் சொன்ன* சப்பாணி ஈரைந்தும்* 
    வேட்கையினால் சொல்லுவார்*  வினை போதுமே (2)   


    அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
    அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
    அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)


    அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*

    மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
    சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   


    ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 

    ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
    தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.


    எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
    ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*

    கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
    தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  


    மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
    அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

    நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
    சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.


    எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
    இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 

    நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
    திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.


    முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
    அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 

    கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
    தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        


    நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
    அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*

    காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
    தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   


    நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
    அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,

    நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
    அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  


    செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
    எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 

    மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
    செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 


    பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
    துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*

    அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
    மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.


    வைப்பாம் மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
    துப்பாம் புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*

    எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
    அப்பாலவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே.


    ஆயர் கொழுந்தாய்*  அவரால் புடையுண்ணும்,* 
    மாயப் பிரானை*  என் மாணிக்கச் சோதியை,*

    தூய அமுதைப்*  பருகிப் பருகி,*  என்- 
    மாயப் பிறவி*  மயர்வு அறுத்தேனே.


    மயர்வு அற என் மனத்தே*  மன்னினான் தன்னை,* 
    உயர்வினையே தரும்*  ஒண் சுடர்க் கற்றையை,*

    அயர்வு இல் அமரர்கள்,*  ஆதிக் கொழுந்தை,*  என் 
    இசைவினை*  என் சொல்லி யான் விடுவேனோ?  


    விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 
    நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

    தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 
    விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.


    பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 
    விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*

    மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 
    இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?   


    யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 
    தான் ஒட்டி வந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*

    ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 
    வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.


    என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 
    தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*

    பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 
    முன்னை அமரர்*  முழுமுதல் தானே. 


    அமரர் முழுமுதல்*  ஆகிய ஆதியை,* 
    அமரர்க்கு அமுது ஈந்த*  ஆயர் கொழுந்தை,*

    அமர அழும்பத்*  துழாவி என் ஆவி,* 
    அமரத் தழுவிற்று*  இனி அகலும்மோ.


    அகலில் அகலும்*  அணுகில் அணுகும்,* 
    புகலும் அரியன்*  பொரு அல்லன் எம்மான்,*

    நிகர் இல் அவன் புகழ்*  பாடி இளைப்பு இலம்,* 
    பகலும் இரவும்*  படிந்து குடைந்தே.


    குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
    அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*

    மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
    உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.