பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
சிங்கம் அது ஆய் அவுணன்* திறல் ஆகம் முன் கீண்டு உகந்த*
சங்கம் இடத்தானை* தழல்ஆழி வலத்தானை*
செங்கமலத் தயனையார்* தென்ணழுந்தையில் மன்னிநின்ற*
அம் கமலக் கண்ணனை* அடியேன் கண்டு கொண்டேனே*.(2)
கோவானார் மடியக்* கொலையார் மழுக்கொண்டு அருளும்*
மூவா வானவனை* முழுநீர் வண்ணனை* அடியார்க்கு-
ஆ! ஆ! என்று இரங்கித்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
தேவாதி தேவனை* யான் கண்டுகொண்டு திளைத்தேனே*.
உடையானை* ஒலி நீர் உலகங்கள் படைத்தானை*
விடையான் ஓட அன்று* விறல் ஆழி விசைத்தானை*
அடையார் தென் இலங்கை அழித்தானை* அணி அழுந்தூர்-
உடையானை* அடியேன் அடைந்து உய்ந்துபோனேனே*.
குன்றால் மாரி தடுத்தவனை* குல வேழம் அன்று-
பொன்றாமை* அதனுக்கு அருள்செய்த போர் ஏற்றை*
அன்று ஆவின்நறுநெய்* அமர்ந்து உண்ட அணி அழுந்தூர்-
நின்றானை* அடியேன் கண்டுகொண்டு நிறைந்தேனே*.
கஞ்சனைக் காய்ந்தானை* கண்ணமங்கையுள் நின்றானை*
வஞ்சனப் பேய் முலையூடு* உயிர் வாய் மடுத்து உண்டானை*
செஞ்சொல் நான்மறையோர்* தென் அழுந்தையில் மன்னி நின்ற*
அஞ்சனக் குன்றம் தன்னை* அடியேன் கண்டுகொண்டேனே*.
பெரியானை* அமரர் தலைவற்கும் பிரமனுக்கும்*
உரி யானை உகந்தானவனுக்கும்* உணர்வதனுக்கு
அரியானை* அழுந்தூர் மறையோர்கள்* அடிபணியும்
கரியானை* அடியேன் கண்டுகொண்டு களித்தேனே*.
திருவாழ் மார்வன் தன்னை* திசை மண்நீர் எரிமுதலா*
உருவாய் நின்றவனை* ஒலிசேரும் மாருதத்தை*
அருவாய் நின்றவனை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
கருவார் கற்பகத்தை* கண்டுகொண்டு களித்தேனே*
நிலையாளாக* என்னை யுகந்தானை* நிலமகள்தன்-
முலையாள் வித்தகனை* முதுநான்மறை வீதிதொறும்*
அலையாரும் கடல்போல் முழங்கும்* தென்னழுந்தையில் மன்னி நின்ற*
கலையார் சொற்பொருளைக்* கண்டு கொண்டு களித்தேனே*.
பேரானை* குடந்தைப் பெருமானை* இலங்கு ஒளிசேர்-
வாரார் வனமுலையாள்* மலர்மங்கை நாயகனை,*
ஆரா இன்னமுதை* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
காரார் கருமுகிலை* கண்டு கொண்டு களித்தேனே*. (2)
திறல் முருகனனையார்* தென்னழுந்தையில் மன்னிநின்ற*
அறமுதல் வனவனை* அணியாலியர் கோன் மருவார்*
கறைநெடு வேல்வலவன்* கலிகன்றி சொல் ஐயிரண்டும்*
முறைவழுவாமை வல்லார்* முழுது ஆள்வர் வானுலகே*.
பாமரு மூவுலகும் படைத்த* பற்ப நாபாவோ,*
பாமரு மூவுலகும் அளந்த* பற்ப பாதாவோ,*
தாமரைக் கண்ணாவோ!* தனியேன் தனிஆளாவோ,*
தாமரைக் கையாவோ!* உன்னை என்றுகொல் சேர்வதுவே? (2)
என்றுகொல் சேர்வது அந்தோ* அரன் நான்முகன் ஏத்தும்,* செய்ய
நின் திருப்பாதத்தை* யான்நிலம் நீர்எரி கால்,* விண்உயிர்
என்றுஇவை தாம்முதலா* முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து* அவை காத்த எம்கூத்தாவோ!
காத்த எம்கூத்தாவோ!* மலைஏந்திக் கல்மாரி தன்னை,*
பூத்தண் துழாய்முடியாய்!* புனை கொன்றையஞ் செஞ்சடையாய்,*
வாய்த்த என் நான்முகனே!* வந்துஎன் ஆர்உயிர் நீஆனால்,*
ஏத்துஅரும் கீர்த்தியினாய்!* உன்னை எங்குத் தலைப்பெய்வனே?
எங்குத் தலைப்பெய்வன் நான்?* எழில் மூவுலகும் நீயே,*
அங்கு உயர் முக்கண்பிரான்* பிரம பெருமான் அவன்நீ,*
வெங்கதிர் வச்சிரக் கை* இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
கொங்குஅலர் தண்அம் துழாய்முடி* என்னுடைக் கோவலனே?
என்னுடைக் கோவலனே!* என் பொல்லாக் கருமாணிக்கமே,*
உன்னுடை உந்தி மலர்* உலகம் அவைமூன்றும் பரந்து,*
உன்னுடைச் சோதிவெள்ளத்து அகம்பால்* உன்னைக் கண்டுகொண்டிட்டு,*
என்னுடை ஆர்உயிரார்* எங்ஙனேகொல் வந்து எய்துவரே?
வந்துஎய்து மாறுஅறியேன்* மல்கு நீலச் சுடர்தழைப்ப,*
செஞ்சுடர்ச் சோதிகள் பூத்து* ஒரு மாணிக்கம் சேர்வதுபோல்,*
அந்தரமேல் செம்பட்டோடு* அடி உந்திகை மார்புகண்வாய்,*
செஞ்சுடர்ச் சோதி விடஉறை* என்திரு மார்பனையே.
என்திரு மார்பன் தன்னை* என் மலைமகள் கூறன்தன்னை,*
என்றும் என்நாமகளை* அகம்பால்கொண்ட நான்முகனை,*
நின்ற சசிபதியை* நிலம்கீண்டு எயில் மூன்றுஎரித்த,*
வென்று புலன்துரந்த* விசும்புஆளியை காணேனோ!
ஆளியைக் காண்பரியாய்* அரிகாண் நரியாய்,* அரக்கர்
ஊளைஇட்டு அன்று இலங்கைகடந்து* பிலம்புக்குஒளிப்ப,*
மீளியம் புள்ளைக்கடாய்* விறல் மாலியைக் கொன்று,* பின்னும்
ஆள்உயர் குன்றங்கள் செய்து* அடர்த்தானையும் காண்டும்கொலோ?
காண்டும்கொலோ நெஞ்சமே!* கடிய வினையே முயலும்,*
ஆண்திறல் மீளிமொய்ம்பின்* அரக்கன் குலத்தைத் தடிந்து,*
மீண்டும் அவன் தம்பிக்கே* விரி நீர்இலங்கைஅருளி,*
ஆண்டு தன் சோதிபுக்க* அமரர் அரியேற்றினையே?
ஏற்றுஅரும் வைகுந்தத்தை* அருளும் நமக்கு,* ஆயர்குலத்து
ஈற்றுஇளம் பிள்ளைஒன்றாய்ப்புக்கு* மாயங்களே இயற்றி,*
கூற்றுஇயல் கஞ்சனைக் கொன்று* ஐவர்க்காய் ஆக்கொடும்சேனைதடிந்து,*
ஆற்றல் மிக்கான் பெரிய* பரஞ்சோதி புக்க அரியே
புக்க அரிஉருஆய்* அவுணன்உடல் கீண்டுஉகந்த,*
சக்கரச் செல்வன்தன்னைக்* குருகூர்ச் சடகோபன் சொன்ன,*
மிக்க ஓர்ஆயிரத்துள்* இவைபத்தும் வல்லார் அவரைத்,*
தொக்கு பல்லாண்டுஇசைத்து* கவரி செய்வர் ஏழையரே (2)