பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    நாவலம் பெரிய தீவினில் வாழும்*  நங்கைமீர்கள்! இது ஓர் அற்புதம் கேளீர்* 
    தூ வலம்புரி உடைய திருமால்*  தூய வாயிற் குழல்-ஓசை வழியே* 

    கோவலர் சிறுமியர் இளங் கொங்கை- குதுகலிப்ப*  உடல் உள் அவிழ்ந்து*  எங்கும்- 
    காவலும் கடந்து கயிறுமாலை*  ஆகி வந்து கவிழ்ந்து நின்றனரே.* (2)  


    இட அணரை இடத் தோளொடு சாய்த்து*  இருகை கூடப் புருவம் நெரிந்து ஏறக்* 
    குடவயிறு பட வாய் கடைகூடக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    மட மயில்களொடு மான்பிணை போலே*  மங்கைமார்கள் மலர்க் கூந்தல் அவிழ* 
    உடை நெகிழ ஓர்கையால் துகில் பற்றி*  ஒல்கி ஓடு அரிக்கண் ஒட நின்றனரே.*


    வான் இளவரசு வைகுந்தக்  குட்டன்*  வாசுதேவன் மதுரைமன்னன்*  நந்த- 
    கோன் இளவரசு கோவலர் குட்டன்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது* 

    வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி*  மனம் உருகி மலர்க்கண்கள் பனிப்பத்* 
    தேன் அளவு செறி கூந்தல் அவிழச்*  சென்னி வேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே.*


    தேனுகன் பிலம்பன் காளியன் என்னும்*  தீப்பப் பூடுகள் அடங்க உழக்கிக்* 
    கானகம் படி உலாவி உலாவிக்*  கருஞ்சிறுக்கன் குழல் ஊதின போது* 

    மேனகையொடு திலோத்தமை அரம்பை*  உருப்பசியர் அவர் வெள்கி மயங்கி* 
    வானகம் படியில் வாய் திறப்பு இன்றி*  ஆடல் பாடல் இவை மாறினர் தாமே.*a


    முன் நரசிங்கமது ஆகி*  அவுணன்- முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்- 
    மன்னர் அஞ்சும்*  மதுசூதனன் வாயிற்*  குழலின் ஓசை செவியைப் பற்றி வாங்க* 

    நன் நரம்பு உடைய தும்புருவோடு*  நாரதனும் தம் தம் வீணை மறந்து* 
    கின்னர மிதுனங்களும் தம் தம்*  கின்னரம் தொடுகிலோம் என்றனரே* 


    செம் பெருந் தடங்- கண்ணன் திரள் தோளன்*  தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்* 
    நம் பரமன் இந்நாள் குழல் ஊதக்*  கேட்டவர்கள் இடர் உற்றன கேளீர்*

    அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்*  அமுத கீத வலையால் சுருக்குண்டு* 
    நம் பரம் அன்று என்று நாணி மயங்கி*  நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே.*


    புவியுள் நான் கண்டது ஒர் அற்புதம் கேளீர்*  பூணி மேய்க்கும் இளங்கோவலர் கூட்டத்து* 
    அவையுள் நாகத்து- அணையான் குழல் ஊத*  அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப* 

    அவியுணா மறந்து வானவர் எல்லாம்*  ஆயர்-பாடி நிறையப் புகுந்து ஈண்டிச்* 
    செவி-உணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து*  கோவிந்தனைத் தொடர்ந்து என்றும் விடாரே.*  


    சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்*  செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக* 
    குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்*  கோவிந்தன் குழல்கொடு ஊதின போது*

    பறவையின் கணங்கள் கூடு துறந்து*  வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்* 
    கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்*  கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே.* 


    திரண்டு எழு தழை மழைமுகில் வண்ணன்*  செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே* 
    சுருண்டு இருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்*  ஊதுகின்ற குழல்-ஓசை வழியே* 

    மருண்டு மான்-கணங்கள் மேய்கை மறந்து*  மேய்ந்த புல்லும் கடைவாய் வழி சோர* 
    இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா*  எழுது சித்திரங்கள் போல நின்றனவே.*


    கருங்கண் தோகை மயிற் பீலி அணிந்து*  கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை* 
    அருங்கல உருவின் ஆயர் பெருமான்*  அவனொருவன் குழல் ஊதின போது* 

    மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்*  மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்* 
    இரங்கும் கூம்பும் திருமால் நின்ற நின்ற- பக்கம் நோக்கி*  அவை செய்யும் குணமே.*


    குழல் இருண்டு சுருண்டு ஏறிய குஞ்சிக்*  கோவிந்தனுடைய கோமள வாயிற்* 
    குழல் முழைஞ்சுகளின் ஊடு குமிழ்த்துக்*  கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னைக்* 

    குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்*  விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்* 
    குழலை வென்ற குளிர் வாயினராகிச்*  சாதுகோட்டியுள் கொள்ளப் படுவாரே.* (2)


    தூவிரிய மலர் உழக்கி*  துணையோடும் பிரியாதே* 
    பூவிரிய மது நுகரும்*  பொறி வரிய சிறு வண்டே!* 

    தீவிரிய மறை வளர்க்கும்*  புகழ் ஆளர் திருவாலி* 
    ஏவரி வெம் சிலையானுக்கு*  என் நிலைமை உரையாயே. (2)


    பிணிஅவிழு நறுநீல*  மலர் கிழிய பெடையோடும்*   
    அணிமலர்மேல் மதுநுகரும்*  அறுகால சிறு வண்டே!* 

    மணிகழுநீர் மருங்குஅலரும்*  வயல் ஆலி மணவாளன்*   
    பணிஅறியேன் நீ சென்று*  என் பயலை நோய் உரையாயே.


    நீர்வானம் மண் எரி கால் ஆய்*  நின்ற நெடுமால்* 
    தன்தார் ஆய நறுந் துளவம்*  பெறும் தகையேற்கு அருளானே*

    சீர்ஆரும் வளர்பொழில்சூழ்*  திருவாலி வயல்வாழும்* 
    கூர்வாய சிறுகுருகே!*  குறிப்புஅறிந்து கூறாயே.      


    தானாக நினையானேல்*  தன் நினைந்து நைவேற்கு*
    ஓர் மீன் ஆய கொடி நெடு வேள்*  வலி செய்ய மெலிவேனோ?*

    தேன் வாய வரி வண்டே!*  திருவாலி நகர் ஆளும்*   
    ஆன்ஆயற்கு என் உறு நோய்*  அறிய சென்று உரையாயே.


    வாள் ஆய கண் பனிப்ப*  மென் முலைகள் பொன் அரும்ப* 
    நாள் நாளும்*  நின் நினைந்து நைவேற்கு*

    ஓ! மண் அளந்த தாளாளா! தண் குடந்தை நகராளா!*  வரை எடுத்த தோளாளா*
    என்தனக்கு ஓர்*  துணையாளன் ஆகாயே!


    தார் ஆய தன் துளவம்*  வண்டு உழுதவரை மார்பன்* 
    போர் ஆனைக் கொம்பு ஒசித்த*  புள் பாகன் என் அம்மான்*

    தேர் ஆரும் நெடு வீதித்*  திருவாலி நகர் ஆளும்* 
    கார் ஆயன் என்னுடைய*  கன வளையும் கவர்வானோ! 


    கொண்டு அரவத் திரை உலவு*  குரை கடல்மேல் குலவரைபோல்* 
    பண்டு அரவின் அணைக் கிடந்து*  பார் அளந்த பண்பாளா!*

    வண்டு அமரும் வளர் பொழில் சூழ்*  வயல் ஆலி மைந்தா!* 
    என் கண் துயில் நீ கொண்டாய்க்கு*  என் கன வளையும் கடவேனோ!?


    குயில் ஆலும் வளர் பொழில் சூழ்*  தண் குடந்தைக் குடம் ஆடி* 
    துயிலாத கண்_இணையேன்*  நின் நினைந்து துயர்வேனோ!*

    முயல் ஆலும் இள மதிக்கே*  வளை இழந்தேற்கு*
    இது நடுவே வயல் ஆலி மணவாளா!*  கொள்வாயோ மணி நிறமே!  


    நிலை ஆளா நின் வணங்க*  வேண்டாயே ஆகிலும் என்* 
    முலை ஆள ஒருநாள்*  உன் அகலத்தால் ஆளாயே*

    சிலையாளா! மரம் எய்த திறல் ஆளா!*  திருமெய்யமலையாளா*
    நீஆள வளை ஆள மாட்டோமே. 


    மை இலங்கு கருங் குவளை*  மருங்கு அலரும் வயல் ஆலி* 
    நெய் இலங்கு சுடர் ஆழிப் படையானை*  நெடுமாலை* 

    கை இலங்கு வேல் கலியன்*  கண்டு உரைத்த தமிழ் மாலை* 
    ஐஇரண்டும் இவை வல்லார்க்கு*  அரு வினைகள் அடையாவே. (2)


    செய்ய தாமரைக் கண்ணன் ஆய்*  உலகு ஏழும் உண்ட அவன் கண்டீர்,* 
    வையம் வானம் மனிசர் தெய்வம்*  மற்றும் மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    செய்யசூழ் சுடர் ஞானம் ஆய்*  வெளிப் பட்டு இவை படைத்தான்*  பின்னும் 
    மொய்கொள் சோதியோடு ஆயினான்*  ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே. (2)


    மூவர் ஆகிய மூர்த்தியை*  முதல் மூவர்க்கும் முதல்வன் தன்னை,* 
    சாவம் உள்ளன நீக்குவானை*  தடங் கடல் கிடந்தான் தன்னை,* 

    தேவ தேவனை தென் இலங்கை*  எரி எழச் செற்ற வில்லியை,* 
    பாவ நாசனை பங்கயத்தடங் கண்ணனைப்*  பரவுமினோ.


    பரவி வானவர் ஏத்த நின்ற*  பரமனை பரஞ்சோதியை,* 
    குரவை கோத்த குழகனை*  மணி வண்ணனை குடக் கூத்தனை,* 

    அரவம் ஏறி அலை கடல் அமரும்*  துயில்கொண்ட அண்ணலை,* 
    இரவும் நன் பகலும் விடாது*  என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ. 


    வைம்மின் நும் மனத்து என்று*  யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை* 
    எம்மனோர்கள் உரைப்பது என்? அது நிற்க நாள்தொறும்,*  வானவர் 

    தம்மை ஆளும் அவனும்*  நான்முகனும் சடைமுடி அண்ணலும்,* 
    செம்மையால் அவன் பாத பங்கயம்*  சிந்தித்து ஏத்தித் திரிவரே.


    திரியும் காற்றோடு அகல் விசும்பு*  திணிந்த மண் கிடந்த கடல்,* 
    எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம்,*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்,*

    கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்*  கண்ணன் விண்ணோர் இறை,* 
    சுரியும் பல் கருங் குஞ்சி*  எங்கள் சுடர் முடி அண்ணல் தோற்றமே. 


    தோற்றம் கேடு அவை இல்லவன் உடையான்*  அவன் ஒரு மூர்த்தியாய்,* 
    சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப்*  புகநின்ற செங்கண்மால்,* 

    நாற்றம் தோற்றம் சுவை ஒலி*  உறல் ஆகி நின்ற,*  எம் வானவர் 
    ஏற்றையே அன்றி*  மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.    


    எழுமைக்கும் எனது ஆவிக்கு*  இன்அமுதத்தினை எனது ஆர் உயிர்,*
    கெழுமிய கதிர்ச் சோதியை*  மணிவண்ணனை குடக் கூத்தனை,* 

    விழுமிய அமரர் முனிவர் விழுங்கும்*  கன்னல் கனியினை,* 
    தொழுமின் தூய மனத்தர் ஆய்*  இறையும் நில்லா துயரங்களே.


    துயரமே தரு துன்ப இன்ப வினைகள் ஆய்*  அவை அல்லன் ஆய்,* 
    உயர நின்றது ஓர் சோதி ஆய்*  உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தன்னை,*

    அயர வாங்கும் நமன் தமர்க்கு*  அரு நஞ்சினை அச்சுதன் தன்னை,* 
    தயரதற்கு மகன் தன்னை அன்றி*  மற்று இலேன் தஞ்சமாகவே.


    தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு*  தானும் ஆய் அவை அல்லன் ஆய்,* 
    எஞ்சல் இல் அமரர் குலமுதல்*  மூவர் தம்முள்ளும் ஆதியை,* 

    அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள்!*  அவன் இவன் என்று கூழேன்மின்,* 
    நெஞ்சினால் நினைப்பான் எவன்*  அவன் ஆகும் நீள் கடல் வண்ணனே.  


    கடல்வண்ணன் கண்ணன்*  விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர் உயிர்* 
    படஅரவின் அணைக்கிடந்த*  பரஞ்சுடர் பண்டு நூற்றுவர்,* 

    அடவரும் படை மங்க*  ஐவர்கட்கு ஆகி வெம்சமத்து,*  அன்றுதேர் 
    கடவிய பெருமான்*  கனைகழல் காண்பது என்றுகொல் கண்களே?


    கண்கள் காண்டற்கு அரியன் ஆய்*  கருத்துக்கு நன்றும் எளியன் ஆய்,* 
    மண்கொள் ஞாலத்து உயிர்க்கு எல்லாம் அருள் செய்யும்*  வானவர் ஈசனை,* 

    பண்கொள் சோலை வழுதி நாடன்*  குருகைக்கோன் சடகோபன் சொல்,* 
    பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்*  பத்தர் ஆகக் கூடும் பயிலுமினே. (2)