பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    தந்தை காலில் விலங்குஅற*  வந்து தோன்றிய தோன்றல்பின்,*  தமியேன் தன்- 
    சிந்தை போயிற்று*  திருவருள் அவனிடைப் பெறும்அளவு இருந்தேனை,*

    அந்தி காவலன் அமுதுஉறு பசுங்கதிர்*  அவைசுட அதனோடும்,* 
    மந்த மாருதம் வனமுலை தடவந்து*  வலிசெய்வது ஒழியாதே!   (2)


    மாரி மாக்கடல் வளைவணற்கு இளையவன்*  வரைபுரை திருமார்வில்,* 
    தாரின் ஆசையில் போயின நெஞ்சமும்*  தாழ்ந்ததுஓர் துணைகாணேன்,*

    ஊரும் துஞ்சிற்று உலகமும் துயின்றது*  ஒளியவன் விசும்புஇயங்கும்,* 
    தேரும் போயிற்று திசைகளும் மறைந்தன*  செய்வது ஒன்று அறியேனே!


    ஆயன் மாயமே அன்றி மற்றுஎன்கையில்*  வளைகளும் இறைநில்லா,* 
    பேயின் ஆர்உயிர் உண்டிடும் பிள்ளை*  நம் பெண்உயிர்க்கு இரங்குமோ,*

    தூய மாமதிக் கதிர்சுடதுணைஇல்லை*  இணைமுலை வேகின்றதால்,* 
    ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்*  அஞ்சேல் என்பார் இலையே!


    கயம்கொள் புண்தலைக் களிறுஉந்து வெம்திறல்*  கழல்மன்னர் பெரும்போரில்,* 
    மயங்க வெண்சங்கம் வாய்வைத்த மைந்தனும்*  வந்திலன், மறிகடல்நீர்*

    தயங்கு வெண்திரைத் திவலைநுண் பனிஎனும்*  தழல் முகந்து இளமுலைமேல்,* 
    இயங்கும் மாருதம் விலங்கில்என் ஆவியை*  எனக்குஎனப் பெறலாமே!


    ஏழு மாமரம் துளைபட சிலைவளைத்து*  இலங்கையை மலங்குவித்த- 
    ஆழியான்,*  நமக்கு அருளிய அருளொடும்*  பகல்எல்லை கழிகின்றதால்,*

    தோழி! நாம்இதற்கு என்செய்தும்? துணைஇல்லை*  சுடர்படு முதுநீரில்,* 
    ஆழ வாழ்கின்ற ஆவியை அடுவதுஓர்*  அந்தி வந்து அடைகின்றதே!     


    முரியும் வெண்திரை முதுகயம் தீப்பட*  முழங்குஅழல் எரிஅம்பின்,* 
    வரி கொள் வெம் சிலை வளைவித்த மைந்தனும்*  வந்திலன் என்செய்கேன்,*

    எரியும் வெம்கதிர் துயின்றது*  பாவியேன் இணைநெடுங் கண்துயிலா,*
    கரிய நாழிகை ஊழியின் பெரியன*  கழியும்ஆறு அறியேனே!  


    கலங்க மாக்கடல் கடைந்துஅடைத்து*  இலங்கையர் கோனது வரைஆகம்,- 
    மலங்க வெம்சமத்து அடுசரம் துரந்த*  எம் அடிகளும் வாரானால்,*

    இலங்கு வெம்கதிர் இளமதி அதனொடும்*  விடைமணி அடும்,*  ஆயன்- 
    விலங்கல் வேயினது ஓசையும்ஆய்*  இனி விளைவது ஒன்றுஅறியேனே!  


    முழுது இவ்வையகம் முறைகெட மறைதலும்*  முனிவனும் முனிவுஎய்த,* 
    மழுவினால் மன்னர் ஆர்உயிர் வவ்விய*  மைந்தனும் வாரானால்,*

    ஒழுகு நுண்பனிக்கு ஒடுங்கிய பேடையை*  அடங்க அம்சிறைகோலித்,* 
    தழுவும் நள்இருள் தனிமையின் கடியதுஓர்*  கொடுவினை அறியேனே!


    கனம்செய் மாமதிள் கணபுரத்து அவனொடும்*  கனவினில் அவன்தந்த,* 
    மனம்செய் இன்பம்வந்து உள்புக வெள்கி*  என் வளைநெக இருந்தேனை,*

    சினம்செய் மால்விடைச் சிறுமணி ஓசை*  என் சிந்தையைச் சிந்துவிக்கும்,* 
    அனந்தல் அன்றிலின் அரிகுரல்*  பாவியேன் ஆவியை அடுகின்றதே!   


    வார்கொள் மென்முலை மடந்தையர்*  தடங்கடல் வண்ணனைத் தாள்நயந்து,*
    ஆர்வத்தால் அவர் புலம்பிய புலம்பலை*  அறிந்துமுன் உரைசெய்த,*

    கார்கொள் பைம்பொழில் மங்கையர் காவலன்*  கலிகன்றி ஒலிவல்லார்,*
    ஏர்கொள் வைகுந்த மாநகர் புக்கு*  இமையவரொடும் கூடுவரே!    (2)


    மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
    தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*

    சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
    வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    


    'காணவாராய்' என்றுஎன்று*   கண்ணும்வாயும் துவர்ந்து*  அடியேன் 
    நாணி நல்நாட்டு அலமந்தால்*  இரங்கி ஒருநாள் நீஅந்தோ*

    காணவாராய்! கருநாயிறுஉதிக்கும்*  கருமாமாணிக்க* 
    நாள்நல்மலைபோல் சுடர்ச்சோதி*  முடிசேர் சென்னி அம்மானே!  


    'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்* 
    கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    படிசேர்மகரக் குழைகளும்*  பவளவாயும் நால்தோளும்* 
    துடிசேர் இடையும் அமைந்தது ஓர்*  தூநீர் முகில்போல் தோன்றாயே. 


    தூநீர் முகில்போல் தோன்றும்*  நின்சுடர்கொள் வடிவும் கனிவாயும்* 
    தேநீர்க்கமலக் கண்களும்*  வந்து என்சிந்தை நிறைந்தவா*

    மாநீர்வெள்ளிமலை தன்மேல்*  வண்கார் நீல முகில்போல* 
    தூநீர்க்கடலுள் துயில்வானே!*  எந்தாய்! சொல்லமாட்டேனே.    


    சொல்லமாட்டேன் அடியேன்*  உன்துளங்குசோதித் திருப்பாதம்* 
    எல்லைஇல் சீர்இள நாயிறு*  இரண்டுபோல் என்உள்ளவா!*

    அல்லல் என்னும் இருள்சேர்தற்கு*  உபாயம் என்னே? ஆழிசூழ்* 
    மல்லை ஞாலம் முழுதுஉண்ட*  மாநீர்க் கொண்டல் வண்ணனே! 


    'கொண்டல் வண்ணா! குடக்கூத்தா!*  வினையேன் கண்ணா! கண்ணா* என் 
    அண்டவாணா!' என்றுஎன்னை*   ஆளக் கூப்பிட்டுஅழைத்தக்கால்*

    விண்தன்மேல்தான் மண்மேல்தான்*  விரிநீர்க் கடல்தான் மற்றுத்தான்* 
    தொண்டனேன் உன்கழல்காண*  ஒருநாள்வந்து தோன்றாயே.


    வந்து தோன்றாய்அன்றேல்*  உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* 
    முந்தி வந்து யான்நிற்ப*   முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*

    செந்தண்கமலக் கண்கைகால்*  சிவந்தவாய்ஓர் கருநாயிறு* 
    அந்தம் இல்லாக் கதிர்பரப்பி*  அலர்ந்ததுஒக்கும் அம்மானே!   


    ஒக்கும் அம்மான் உருவம்என்று*  உள்ளம் குழைந்து நாள்நாளும்* 
    தொக்க மேகப் பல்குழாங்கள்*  காணும்தோறும் தொலைவன்நான்*

    தக்க ஐவர் தமக்காய்அன்று*  ஈர்ஐம்பதின்மர் தாள்சாயப்* 
    புக்கநல்தேர்த் தனிப்பாகா!*  வாராய் இதுவோ பொருத்தமே?


    'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
    அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*

    எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
    மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  


    பிறந்தமாயா! பாரதம்பொருதமாயா!*  நீஇன்னே* 
    சிறந்தகால் தீநீர்வான்*  மண்பிறவும்ஆய பெருமானே*

    கறந்த பாலுள் நெய்யேபோல்*  இவற்றுள்எங்கும் கண்டுகொள்* 
    இறந்து நின்ற பெருமாயா!*  உன்னை எங்கே காண்கேனே?  


    'எங்கேகாண்கேன் ஈன்துழாய் அம்மான்தன்னை*  யான்?' என்றுஎன்று* 
    அங்கே தாழ்ந்த சொற்களால்*  அம்தண் குருகூர்ச் சடகோபன்*

    செங்கேழ் சொன்ன ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்* 
    இங்கே காண இப்பிறப்பே மகிழ்வர்*  எல்லியும் காலையே.  (2)