பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கலங்க முந்நீர் கடைந்து* அமுதம் கொண்டு* இமையோர்
துளங்கல் தீர* நல்கு சோதிச் சுடர் ஆய*
வலங்கை ஆழி இடங்கைச் சங்கம்* உடையான் ஊர்*
நலம் கொள் வாய்மை* அந்தணர் வாழும் நறையூரே.
முனை ஆர் சீயம் ஆகி* அவுணன் முரண் மார்வம்*
புனை வாள் உகிரால்* போழ்பட ஈர்ந்த புனிதன் ஊர்*
சினை ஆர் தேமாஞ் செந் தளிர் கோதிக்* குயில் கூவும்*
நனை ஆர் சோலை சூழ்ந்து* அழகு ஆய நறையூரே.
ஆனை புரவி தேரொடு காலாள்* அணிகொண்ட*
சேனைத் தொகையைச் சாடி* இலங்கை செற்றான் ஊர்*
மீனைத் தழுவி வீழ்ந்து எழும்* மள்ளர்க்கு அலமந்து*
நானப் புதலில்* ஆமை ஒளிக்கும்நறையூரே.
உறி ஆர் வெண்ணெய் உண்டு* உரலோடும் கட்டுண்டு*
வெறி ஆர் கூந்தல்* பின்னைபொருட்டு ஆன் வென்றான் ஊர்*
பொறி ஆர் மஞ்ஞை* பூம் பொழில்தோறும் நடம் ஆட*
நறு நாள்மலர்மேல்* வண்டு இசை பாடும் நறையூரே.
விடை ஏழ் வென்று* மென் தோள் ஆய்ச்சிக்கு அன்பன் ஆய்*
நடையால் நின்ற* மருதம் சாய்த்த நாதன் ஊர்*
பெடையோடு அன்னம்* பெய்வளையார் தம்பின்சென்று*
நடையோடு இயலி* நாணி ஒளிக்கும் நறையூரே.
பகு வாய் வன் பேய்* கொங்கை சுவைத்து ஆர் உயிர் உண்டு*
புகு வாய் நின்ற* போதகம் வீழப் பொருதான் ஊர்*
நெகு வாய் நெய்தல்* பூ மது மாந்தி கமலத்தின்*
நகு வாய் மலர்மேல்* அன்னம் உறங்கும் நறையூரே*
முந்து நூலும் முப்புரி நூலும்* முன் ஈந்த*
அந்தணாளன் பிள்ளையை* அஞ்ஞான்று அளித்தான் ஊர்*
பொந்தில் வாழும் பிள்ளைக்கு ஆகி* புள் ஓடி*
நந்து வாரும்* பைம் புனல் வாவி நறையூரே.
வெள்ளைப் புரவித் தேர் விசயற்கு ஆய்* விறல் வியூகம்*
விள்ள சிந்துக்கோன் விழ* ஊர்ந்த விமலன் ஊர்*
கொள்ளைக் கொழு மீன்* உண் குருகு ஓடி பெடையோடும்*
நள்ளக் கமலத்* தேறல் உகுக்கும் நறையூரே.
பாரை ஊரும் பாரம் தீரப்* பார்த்தன்தன்*
தேரை ஊரும்* தேவதேவன் சேறும் ஊர்*
தாரை ஊரும்* தண் தளிர் வேலி புடை சூழ*
நாரை ஊரும்* நல் வயல் சூழ்ந்த* நறையூரே.
தாமத் துளப* நீள் முடி மாயன் தான் நின்ற*
நாமத் திரள் மா மாளிகை சூழ்ந்த* நறையூர்மேல்*
காமக் கதிர் வேல் வல்லான்* கலியன் ஒலி மாலை*
சேமத் துணை ஆம்* செப்பும் அவர்க்கு திருமாலே.
துவள் இல் மா மணி மாடம் ஓங்கு* தொலைவில்லிமங்கலம் தொழும்
இவளை நீர் இனி அன்னைமீர்!* உமக்கு ஆசை இல்லை விடுமினோ,*
தவள ஒண் சங்கு சக்கரம் என்றும்* தாமரைத் தடம் கண் என்றும்,*
குவளை ஒண் மலர்க் கண்கள் நீர் மல்க* நின்று நின்று குமுறுமே.
குமுறும் ஓசை விழவு ஒலித்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
அமுத மென் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திமிர் கொண்டால் ஒத்து நிற்கும்* மற்று இவள்தேவ தேவபிரான் என்றே,*
நிமியும் வாயொடு கண்கள் நீர் மல்க* நெக்கு ஒசிந்து கரையுமே.
கரை கொள் பைம் பொழில் தண்பணைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
உரை கொள் இன் மொழியாளை* நீர் உமக்கு ஆசை இன்றி அகற்றினீர்,*
திரை கொள் பௌவத்துச் சேர்ந்ததும்* திசை ஞாலம் தாவி அளந்ததும்,*
நிரைகள் மேய்த்ததுமே பிதற்றி* நெடும் கண் நீர் மல்க நிற்குமே.
நிற்கும் நால்மறைவாணர் வாழ்* தொலைவில்லிமங்கலம் கண்டபின்,*
அற்கம் ஒன்றும் அற உறாள்* மலிந்தாள் கண்டீர் இவள் அன்னைமீர்,*
கற்கும் கல்வி எல்லாம்* கருங்கடல் வண்ணன் கண்ண பிரான் என்றே,*
ஒற்கம் ஒன்றும் இலள் உகந்து உகந்து* உள் மகிழ்ந்து குழையுமே.
குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.
நோக்கும் பக்கம் எல்லாம்* கரும்பொடு செந்நெல்ஓங்கு செந்தாமரை,*
வாய்க்கும் தண் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
நோக்குமேல் அத்திசை அல்லால்* மறு நோக்கு இலள் வைகல் நாள்தொறும்,*
வாய்க்கொள் வாசகமும்* மணிவண்ணன் நாமமே இவள் அன்னைமீர்!
அன்னைமீர்! அணிமாமயில்* சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து*
என்ன வார்த்தையும் கேட்குறாள்* தொலைவில்லிமங்கலம் என்று அல்லால்,*
முன்னம் நோற்ற விதிகொலோ* முகில் வண்ணன் மாயம் கொலோ,* அவன்
சின்னமும் திருநாமமும்* இவள் வாயனகள் திருந்தவே.
திருந்து வேதமும் வேள்வியும்* திருமா மகளிரும் தாம்,* மலிந்து
இருந்து வாழ் பொருநல்* வடகரை வண் தொலைவில்லிமங்கலம்,*
கருந் தடம் கண்ணி கைதொழுத* அந்நாள் தொடங்கி இந் நாள்தொறும்*
இருந்து இருந்து 'அரவிந்தலோசன!'* என்று என்றே நைந்து இரங்குமே.
இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ* இவள் கண்ண நீர்கள் அலமர,*
மரங்களும் இரங்கும் வகை* 'மணிவண்ணவோ!' என்று கூவுமால்,*
துரங்கம் வாய் பிளந்தான் உறை* தொலைவில்லிமங்கலம் என்று,* தன்
கரங்கள் கூப்பித் தொழும்* அவ்ஊர்த் திருநாமம் கற்றதன் பின்னையே.
பின்னைகொல் நிலமாமகள்கொல்?* திருமகள்கொல் பிறந்திட்டாள்,*
என்ன மாயம்கொலோ?* இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்,*
முன்னி வந்து அவன் நின்று இருந்து உறையும்* தொலைவில்லிமங்கலம்-
சென்னியால் வணங்கும்* அவ் ஊர்த் திருநாமம்* கேட்பது சிந்தையே.
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும்* தேவ பிரானையே,*
தந்தை தாய் என்று அடைந்த* வண் குருகூரவர் சடகோபன்,*
முந்தை ஆயிரத்துள் இவை* தொலை வில்லிமங்கலத்தைச் சொன்ன,*
செந்தமிழ்ப் பத்தும் வல்லார்* அடிமைசெய்வார் திருமாலுக்கே