பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வெருவாதாள் வாய்வெருவி* வேங்கடமே! வேங்கடமே!' என்கின்றாளால்*
மருவாளால் என் குடங்கால்* வாள் நெடுங் கண் துயில் மறந்தாள்* வண்டு ஆர் கொண்டல்-
உருவாளன் வானவர்தம் உயிராளன்* ஒலி திரை நீர்ப் பௌவம் கொண்ட-
திருவாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
கலை ஆளா அகல் அல்குல்* கன வளையும் கை ஆளாஎன் செய்கேன் நான்*
விலை ஆளா அடியேனை வேண்டுதியோ? வேண்டாயோ?' என்னும்* மெய்ய
மலையாளன் வானவர்தம் தலையாளன்* மராமரம் ஏழ்எய்த வென்றிச்
சிலையாளன்* என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சிந்திக்கேனே!
மான் ஆய மென் நோக்கி* வாள்நெடுங்கண்நீர்மல்கும் வளையும்சோரும்*
தேன் ஆய நறுந் துழாய் அலங்கலின்* திறம் பேசி உறங்காள் காண்மின்*
கான் ஆயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக* நந்தன் பெற்ற
ஆன் ஆயன் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
தாய் வாயில் சொல் கேளாள்* தன் ஆயத்தோடு அணையாள் தட மென் கொங்கையே
ஆரச் சாந்து அணியாள் எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
பேய் மாய முலை உண்டு இவ் உலகு உண்ட பெரு வயிற்றன்* பேசில் நங்காய்*
மா மாயன் என் மகளைச் செய்தனகள்* மங்கைமீர்! மதிக்கிலேனே!
பூண் முலைமேல் சாந்து அணியாள்* பொரு கயல் கண் மை எழுதாள் பூவை பேணாள*
ஏண் அறியாள் எத்தனையும்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்*
நாள் மலராள் நாயகன் ஆய்* நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த நம்பி*
ஆண் மகன் ஆய் என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
'தாது ஆடு வன மாலை தாரானோ?' என்று என்றே தளர்ந்தாள் காண்மின்*
யாதானும் ஒன்று உரைக்கில்* எம் பெருமான் திருவரங்கம்' என்னும்* பூமேல்-
மாது ஆளன் குடம் ஆடி மதுசூதன்* மன்னர்க்கு ஆய் முன்னம் சென்ற-
தூதாளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் சொல்லுகேனே?
வார் ஆளும் இளங் கொங்கை* வண்ணம் வேறு ஆயினவாறு எண்ணாள்* எண்ணில்
பேராளன் பேர் அல்லால் பேசாள்* இப்பெண் பெற்றேன் என் செய்கேன் நான்*
தாராளன் தண் குடந்தை நகர் ஆளன்* ஐவர்க்கு ஆய் அமரில் உய்த்த-
தேராளன் என் மகளைச் செய்தனகள்* எங்ஙனம் நான் செப்புகேனே?
உறவு ஆதும் இலள் என்று என்று* ஒழியாது பலர் ஏசும் அலர் ஆயிற்றால*
மறவாதே எப்பொழுதும்* மாயவனே! மாதவனே!' என்கின்றாளால்*
பிறவாத பேராளன் பெண் ஆளன் மண் ஆளன்* விண்ணோர்தங்கள
அறவாளன்* என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
பந்தோடு கழல் மருவாள்* பைங்கிளியும் பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன்* வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
சந்தோகன் பௌழியன்* ஐந்தழல்ஓம்பு தைத்திரியன் சாமவேதி*
அந்தோ வந்து என் மகளைச் செய்தனகள்* அம்மனைமீர்! அறிகிலேனே!
சேல் உகளும் வயல் புடை சூழ்* திருவரங்கத்து அம்மானைச் சிந்தைசெய்த*
நீல மலர்க் கண் மடவாள் நிறை அழிவைத்* தாய் மொழிந்த அதனை* நேரார்
காலவேல் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கற்று வல்லார்*
மாலை சேர் வெண் குடைக்கீழ் மன்னவர் ஆய்* பொன்உலகில் வாழ்வர்தாமே.
எங்ஙனேயோ அன்னைமீர்காள்!* என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்* தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்* செல்கின்றது என்நெஞ்சமே*. (2)
என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்* என்னை முனியாதே
தென் நன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
மின்னு நூலும் குண்டலமும்* மார்பில் திருமறுவும்*
மன்னு பூணும் நான்கு தோளும்* வந்து எங்கும் நின்றிடுமே*.
நின்றிடும் திசைக்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
வென்றி வில்லும் தண்டும் வாளும்* சக்கரமும் சங்கமும்*
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா* நெஞ்சுள்ளும் நீங்காவே*.
நீங்கநில்லா கண்ண நீர்கள்என்று* அன்னையரும் முனிதிர்*
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
பூந்தண் மாலைத் தண் துழாயும்* பொன் முடியும் வடிவும்*
பாங்கு தோன்றும் பட்டும் நாணும்* பாவியேன் பக்கத்தவே*.
பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று* அன்னையரும் முனிதிர்*
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
தொக்க சோதித் தொண்டை வாயும்* நீண்ட புருவங்களும்*
தக்க தாமரைக் கண்ணும்* பாவியேன் ஆவியின் மேலனவே*.
மேலும் வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சோலைசூழ் தண்திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
கோலநீள் கொடி மூக்கும்* தாமரைக் கண்ணும் கனிவாயும்*
நீலமேனியும் நான்கு தோளும்* என் நெஞ்சம் நிறைந்தனவே*.
நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த* நீண்ட பொன் மேனியொடும்*
நிறைந்து என் உள்ளே நின்றொழிந்தான்* நேமி அங்கை உளதே*.
கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று* அன்னையரும் முனிதிர்*
மைகொள் மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
செய்யதாமரைக் கண்ணும் அல்குலும்* சிற்றிடையும் வடிவும்*
மொய்யநீள் குழல் தாழ்ந்த தோள்களும்* பாவியேன் முன் நிற்குமே*.
முன் நின்றாய் என்று தோழிமார்களும்* அன்னையரும் முனிதிர்*
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
சென்னி நீள்முடி ஆதிஆய* உலப்பு இல் அணிகலத்தன்*
கன்னல் பால் அமுதுஆகி வந்து* என் நெஞ்சம் கழியானே*.
கழியமிக்கது ஓர் காதலள் இவள் என்று* அன்னை காணக்கொடாள்*
வழு இல் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை* நான் கண்டபின்*
குழுமித் தேவர் குழாங்கள்* கை தொழச்சோதி வெள்ளத்தினுள்ளே*
எழுவது ஓர் உரு என் நெஞ்சுள் எழும்* ஆர்க்கும் அறிவு அரிதே*.
அறிவு அரிய பிரானை* ஆழியங்கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி* நன்குருகூர்ச் சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருக்குறுங்குடி அதன்மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டவர்* ஆழ்கடல் ஞாலத்துள்ளே*. (2)