பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்*
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.
பாசுரங்கள்
கண் சோர வெம் குருதி வந்து இழிய* வெம் தழல்போல் கூந்தலாளை*
மண் சேர முலை உண்ட மா மதலாய்!* வானவர்தம் கோவே! என்று*
விண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு* மணி மாடம் மல்கு* செல்வத்-
தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார்* காண்மின் என் தலைமேலாரே*
அம் புருவ வரி நெடுங் கண்* அலர்மகளை வரை அகலத்து அமர்ந்து மல்லல்*
கொம்பு உருவ விளங்கனிமேல்* இளங் கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்*
வம்பு அலரும் தண் சோலை* வண் சேறை வான் உந்து கோயில் மேய*
எம் பெருமான் தாள் தொழுவார்* எப்பொழுதும்என் மனத்தே இருக்கின்றாரே*.
மீது ஓடி வாள் எயிறு மின் இலக* முன் விலகும் உருவினாளைக்*
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த* கைத்தலத்தா! என்று நின்று*
தாதோடு வண்டு அலம்பும்* தண் சேறை எம் பெருமான் தாளை ஏத்தி*
போதோடு புனல் தூவும் புண்ணியரே* விண்ணவரின் பொலிகின்றாரே*
தேர் ஆளும் வாள் அரக்கன்* தென் இலங்கை வெம் சமத்துப் பொன்றி வீழ*
போர் ஆளும் சிலைஅதனால்* பொரு கணைகள் போக்குவித்தாய் என்று* நாளும்
தார் ஆளும் வரை மார்பன்* தண் சேறை எம் பெருமான் உம்பர் ஆளும்*
பேராளன் பேர் ஓதும் பெரியோரை* ஒருகாலும் பிரிகிலேனே*.
வந்திக்கும் மற்றவர்க்கும்* மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன்*
முந்திச் சென்று அரி உரு ஆய்* இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்*
சந்தப் பூ மலர்ச் சோலைத்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
சிந்திப்பார்க்கு என் உள்ளம்* தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே*.
பண்டு ஏனம் ஆய் உலகை அன்று இடந்த* பண்பாளா என்று நின்று*
தொண்டு ஆனேன் திருவடியே துணை அல்லால்* துணை இலேன் சொல்லுகின்றேன்*
வண்டு ஏந்தும் மலர்ப் புறவின்* வண் சேறைஎம் பெருமான் அடியார் தம்மைக்*
கண்டேனுக்கு இது காணீர்* என் நெஞ்சும்கண் இணையும் களிக்கும் ஆறே*.
பை விரியும் வரி அரவில்* படு கடலுள் துயில் அமர்ந்த பண்பா! என்றும்*
மை விரியும் மணி வரைபோல்* மாயவனே! என்று என்றும் வண்டு ஆர் நீலம்*
செய் விரியும் தண் சேறை எம் பெருமான்* திரு வடிவைச் சிந்தித்தேற்கு* என்
ஐ அறிவும் கொண்டானுக்கு ஆள் ஆனார்க்கு ஆள் ஆம்* என் அன்புதானே*.
உண்ணாது வெம் கூற்றம்* ஓவாதபாவங்கள் சேரா* மேலை-
விண்ணோரும் மண்ணோரும் வந்து இறைஞ்சும்* மென் தளிர்போல் அடியினானை*
பண் ஆர வண்டு இயம்பும்* பைம் பொழில் சூழ்தண் சேறை அம்மான் தன்னை*
கண் ஆரக் கண்டு உருகி* கை ஆரத்தொழுவாரைக் கருதுங்காலே*.
கள்ளத்தேன் பொய் அகத்தேன் ஆதலால்* போது ஒருகால் கவலை என்னும்*
வெள்ளத்தேற்கு என்கொலோ* விளை வயலுள் கரு நீலம் களைஞர் தாளால்-
தள்ள தேன் மணம் நாறும்* தண் சேறை எம் பெருமான் தாளை* நாளும்-
உள்ளத்தே வைப்பாருக்கு இது காணீர்* என் உள்ளம் உருகும் ஆறே*.
பூ மாண் சேர் கருங் குழலார்போல் நடந்து* வயல் நின்ற பெடையோடு* அன்னம்
தேமாவின் இன் நிழலில் கண் துயிலும்* தண் சேறை அம்மான் தன்னை*
வா மான் தேர்ப் பரகாலன்* கலிகன்றி ஒலி மாலை கொண்டு தொண்டீர்*
தூ மாண் சேர் பொன் அடிமேல் சூட்டுமின்* நும் துணைக் கையால் தொழுது நின்றே*.
ஆழிஎழ* சங்கும் வில்லும்எழ,* திசை
வாழிஎழ* தண்டும் வாளும்எழ,* அண்டம்
மோழைஎழ* முடி பாதம்எழ,* அப்பன்
ஊழிஎழ* உலகம் கொண்டவாறே (2)
ஆறு மலைக்கு* எதிர்ந்துஓடும் ஒலி,* அரவு
ஊறு சுலாய்* மலை தேய்க்கும் ஒலி,* கடல்
மாறு சுழன்று* அழைக்கின்ற ஒலி,* அப்பன்
சாறுபட* அமுதம்கொண்ட நான்றே.
நான்றிலஏழ்* மண்ணும் தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* மலை தானத்தவே,* பின்னும்
நான்றில ஏழ்* கடல் தானத்தவே,* அப்பன்
ஊன்றி இடந்து* எயிற்றில் கொண்ட நாளே.
நாளும்எழ* நிலம் நீரும்எழ* விண்ணும்
கோளும்எழ* எரி காலும்எழ,* மலை
தாளும்எழ* சுடர் தானும்எழ,* அப்பன்
ஊளிஎழ* உலகம்உண்ட ஊணே
ஊணுடை மல்லர்* ததர்ந்த ஒலி,* மன்னர்
ஆண்உடைச் சேனை* நடுங்கும் ஒலி,* விண்ணுள்
ஏண்உடைத் தேவர்* வெளிப்பட்ட ஒலி,* அப்பன்
காணுடைப் பாரதம்* கைஅறை போழ்தே
போழ்து மெலிந்த* புன் செக்கரில்,* வான்திசை
சூழும் எழுந்து* உதிரப்புனலா,* மலை
கீழ்து பிளந்த* சிங்கம்ஒத்ததால்,* அப்பன்
ஆழ்துயர் செய்து* அசுரரைக் கொல்லுமாறே.
மாறு நிரைத்து* இரைக்கும் சரங்கள்,* இன
நூறு பிணம்* மலை போல் புரள,* கடல்
ஆறு மடுத்து* உதிரப்புனலா,* அப்பன்
நீறுபட* இலங்கை செற்ற நேரே
நேர்சரிந்தான்* கொடிக் கோழிகொண்டான்,* பின்னும்
நேர்சரிந்தான்* எரியும் அனலோன்,* பின்னும்
நேர்சரிந்தான்* முக்கண் மூர்த்திகண்டீர்,* அப்பன்
நேர்சரி வாணன்* திண்தோள் கொண்ட அன்றே
அன்றுமண் நீர்எரிகால்* விண் மலைமுதல்,*
அன்று சுடர்* இரண்டு பிறவும்,* பின்னும்
அன்று மழை* உயிர் தேவும் மற்றும்,* அப்பன்
அன்று முதல்* உலகம் செய்ததுமே
மேய்நிரை கீழ்புக* மாபுரள,* சுனை
வாய்நிறை நீர்* பிளிறிச்சொரிய,* இன
ஆநிரை பாடி* அங்கேஒடுங்க,* அப்பன்
தீமழை காத்து* குன்றம் எடுத்தானே
குன்றம் எடுத்தபிரான்* அடியாரொடும்,*
ஒன்றிநின்ற* சடகோபன்உரைசெயல்,*
நன்றி புனைந்த* ஓர்ஆயிரத்துள் இவை*
வென்றி தரும்பத்தும்* மேவிக் கற்பார்க்கே (2)