பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உருப்பிணிநங்கை  தன்னைமீட்பான்*  தொடர்ந்துஓடிச்சென்ற* 
    உருப்பனைஓட்டிக் கொண்டிட்டு*  உறைத்திட்டஉறைப்பன்மலை*

    பொருப்பிடைக்கொன்றைநின்று*  முறிஆழியும்காசும்கொண்டு* 
    விருப்பொடுபொன்வழங்கும்*  வியன்மாலிருஞ்சோலையதே.  (2)


    கஞ்சனும்காளியனும்*  களிறும்மருதும்எருதும்* 
    வஞ்சனையில்மடிய*  வளர்ந்தமணிவண்ணன்மலை*

    நஞ்சுஉமிழ்நாகம்எழுந்துஅணவி*  நளிர்மாமதியைச்* 
    செஞ்சுடர்நாவளைக்கும்*  திருமாலிருஞ்சோலையதே.


    மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
    கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*

    புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
    பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.


    மாவலிதன்னுடைய*  மகன்வாணன்மகள்இருந்த* 
    காவலைக்கட்டழித்த*  தனிக் காளை கருதும் மலை*

    கோவலர்கோவிந்தனைக்*  குற மாதர்கள் பண் குறிஞ்சிப்* 
    பாஒலிபாடிநடம்பயில்*  மாலிருஞ் சோலையதே.


    பலபலநாழம்சொல்லிப்*  பழித்தசிசுபாலன்தன்னை* 
    அலைவலைமை தவிர்த்த*  அழகன்அலங்காரன்மலை*

    குலமலைகோலமலை*  குளிர்மாமலைகொற்றமலை* 
    நிலமலைநீண்டமலை*  திருமாலிருஞ்சோலையதே.


    பாண்டவர்தம்முடைய*  பாஞ்சாலிமறுக்கம்எல்லாம்* 
    ஆண்டுஅங்கு நூற்றுவர்தம்*  பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை*

    பாண்தகு வண்டினங்கள்*  பண்கள்பாடிமதுப்பருக* 
    தோண்டல்உடையமலை*  தொல்லைமாலிருஞ்சோலையதே.


    கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து*  அரக்கர்தங்கள்- 
    இனம்கழுஏற்றுவித்த*  ஏழிற்தோள்எம்இராமன்மலை*

    கனம்கொழிதெள்அருவி*  வந்துசூழ்ந்துஅகல்ஞாலம்எல்லாம்* 
    இனம்குழுஆடும்மலை*  எழில்மாலிருஞ்சோலையதே.


    எரிசிதறும்சரத்தால்*  இலங்கையினைத்*  தன்னுடைய- 
    வரிசிலைவாயிற்பெய்து*  வாய்க்கோட்டம்தவிர்த்துஉகந்த*

    அரையன்அமரும்மலை*  அமரரொடுகோனும்சென்று* 
    திரிசுடர்சூழும்மலை*  திருமாலிருஞ்சோலையதே.


    கோட்டுமண்கொண்டுஇடந்து*  குடங்கையில்மண்கொண்டுஅளந்து* 
    மீட்டும்அதுஉண்டுஉமிழ்ந்து*  விளையாடும்விமலன்மலை*

    ஈட்டியபல்பொருள்கள்*  எம்பிரானுக்குஅடியுறைஎன்று* 
    ஓட்டரும்தண்சிலம்பாறுஉடை*  மாலிருஞ்சோலையதே.


    ஆயிரம்தோள்பரப்பி*  முடிஆயிரம்மின்இலக* 
    ஆயிரம்பைந்தலைய*  அனந்தசயனன்ஆளும்மலை*

    ஆயிரம்ஆறுகளும்*  சுனைகள்பலஆயிரமும்* 
    ஆயிரம்பூம்பொழிலும்உடை*  மாலிருஞ்சோலையதே (2)


    மாலிருஞ்சோலைஎன்னும்*  மலையைஉடையமலையை* 
    நாலிருமூர்த்திதன்னை*  நால்வேதக்-கடல்அமுதை*

    மேல்இருங்கற்பகத்தை*  வேதாந்தவிழுப்பொருளின்* 
    மேல்இருந்தவிளக்கை*  விட்டுசித்தன்விரித்தனனே (2)


    பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
    வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 

    சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    


    பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
    இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 

    சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.


    திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
    படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*

    திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
    அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 

    திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  


    'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
    தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*

    தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.


    மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
    கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 

    செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.


    வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
    கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*

    செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 


    அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
    மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*

    தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்*  கார் முகிலே! என நினைந்திட்டு* 
    உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்*  உள்ளத்துள் ஊறிய தேனை*

    தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.


    தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
    வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 

    ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
    மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.


    கோவை வாயாள் பொருட்டு*  ஏற்றின் எருத்தம் இறுத்தாய்,*  மதிள் இலங்கைக் 
    கோவை வீயச் சிலை குனித்தாய்!*  குல நல் யானை மருப்பு ஒசித்தாய்,* 

    பூவை வீயா நீர் தூவிப்*  போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூவை வீயாம் மேனிக்குப்*  பூசும் சாந்து என் நெஞ்சமே. 


    பூசும் சாந்து என் நெஞ்சமே*  புனையும் கண்ணி எனதுடைய,* 
    வாசகம் செய் மாலையே*  வான் பட்டு ஆடையும் அஃதே,*

    தேசம் ஆன அணிகலனும்*  என் கைகூப்புச் செய்கையே,* 
    ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த*  எந்தை ஏக மூர்த்திக்கே.  


    ஏக மூர்த்தி இரு மூர்த்தி*  மூன்று மூர்த்தி பல மூர்த்தி- 
    ஆகி,*  ஐந்து பூதம் ஆய் இரண்டு சுடர் ஆய் அருவு ஆகி,* 

    நாகம் ஏறி நடுக் கடலுள் துயின்ற*  நாராயணனே உன்- 
    ஆகம் முற்றும் அகத்து அடக்கி*  ஆவி அல்லல் மாய்த்ததே. 


    மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த*  மாயப் பேய் உயிர்- 
    மாய்த்த,*  ஆய மாயனே! வாமனனே மாதவா,* 

    பூத்தண் மாலை கொண்டு*  உன்னைப் போதால் வணங்கேனேலும்,*  நின் 
    பூத்தண் மாலை நெடுமுடிக்குப்*  புனையும் கண்ணி எனது உயிரே.  


    கண்ணி எனது உயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா,* 
    எண் இல் பல்கலன்களும்*  ஏலும் ஆடையும் அஃதே,*

    நண்ணி மூவுலகும்*  நவிற்றும் கீர்த்தியும் அஃதே,* 
    கண்ணன் எம் பிரான் எம்மான்*  கால சக்கரத்தானுக்கே.   


    கால சக்கரத்தொடு*  வெண் சங்கம் கை ஏந்தினாய்,* 
    ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாராயணனே என்று என்று,* 

    ஓலம் இட்டு நான் அழைத்தால்*  ஒன்றும் வாராயாகிலும்,* 
    கோலம் ஆம் என் சென்னிக்கு*  உன் கமலம் அன்ன குரைகழலே.


    குரைகழல்கள் நீட்டி*  மண் கொண்ட கோல வாமனா,* 
    குரை கழல் கைகூப்புவார்கள்*  கூட நின்ற மாயனே,* 

    விரை கொள் பூவும் நீரும்கொண்டு*  ஏத்தமாட்டேனேலும்,*  உன் 
    உரை கொள் சோதித் திரு உருவம்*  என்னது ஆவி மேலதே.  


    என்னது ஆவி மேலையாய்*  ஏர் கொள் ஏழ் உலகமும்,* 
    துன்னி முற்றும் ஆகி நின்ற*  சோதி ஞான மூர்த்தியாய்,* 

    உன்னது என்னது ஆவியும்,*  என்னது உன்னது ஆவியும்* 
    இன்ன வண்ணமே நின்றாய்*  என்று உரைக்க வல்லேனே?   


    உரைக்க வல்லேன் அல்லேன்*  உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்* 
    கரைக்கண் என்று செல்வன் நான்?*  காதல் மையல் ஏறினேன்,*

    புரைப்பு இலாத பரம்பரனே!*  பொய் இலாத பரஞ்சுடரே,* 
    இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த*  யானும் ஏத்தினேன்.       


    யானும் ஏத்தி*  ஏழ் உலகும் முற்றும் ஏத்தி,*  பின்னையும் 
    தானும் ஏத்திலும்*  தன்னை ஏத்த ஏத்த எங்கு எய்தும்,*

    தேனும் பாலும் கன்னலும்*  அமுதும் ஆகித் தித்திப்ப,* 
    யானும் எம் பிரானையே ஏத்தினேன்*  யான் உய்வானே


    உய்வு உபாயம் மற்று இன்மை தேறி*  கண்ணன் ஒண் கழல்கள் மேல்* 
    செய்ய தாமரைப் பழனத்*  தென்னன் குருகூர்ச் சடகோபன்,*

    பொய் இல் பாடல் ஆயிரத்துள்*  இவையும் பத்தும் வல்லார்கள்,* 
    வையம் மன்னி வீற்றிருந்து*  விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2)