பிரபந்த தனியன்கள்

   பாசுரங்கள்


    அரவு அணையாய்! ஆயர் ஏறே!*  அம்மம் உண்ணத் துயிலெழாயே* 
    இரவும் உண்ணாது உறங்கி நீ போய்*  இன்றும் உச்சி கொண்டதாலோ*

    வரவுங் காணேன்;வயிறு அசைந்தாய்*  வன முலைகள் சோர்ந்து பாயத்* 
    திரு உடைய வாய்மடுத்துத்*  திளைத்து உதைத்துப் பருகிடாயே (2)


    வைத்த நெய்யும் காய்ந்த பாலும்*  வடி தயிரும் நறு வெண்ணெயும்* 
    இத்தனையும் பெற்றறியேன்*  எம்பிரான்! நீ பிறந்த பின்னை*

    எத்தனையும் செய்யப் பெற்றாய்;*  ஏதும் செய்யேன் கதம் படாதே* 
    முத்து அனைய முறுவல் செய்து*  மூக்கு உறிஞ்சி முலை உணாயே


    தந்தம் மக்கள் அழுது சென்றால்*  தாய்மார் ஆவார் தரிக்ககில்லார்* 
    வந்து நின்மேற் பூசல் செய்ய*  வாழ வல்ல வாசுதேவா!*

    உந்தையார் உன்திறத்தர் அல்லர்*  உன்னை நான் ஒன்று உரப்பமாட்டேன்* 
    நந்தகோபன் அணி சிறுவா!*  நான் சுரந்த முலை உணாயே


    கஞ்சன்தன்னால் புணர்க்கப்பட்ட*  கள்ளச் சகடு கலக்கு அழிய* 
    பஞ்சி அன்ன மெல்லடியால்*  பாய்ந்த போது நொந்திடும் என்று*

    அஞ்சினேன் காண் அமரர் கோவே!*  ஆயர் கூட்டத்து அளவன்றாலோ* 
    கஞ்சனை உன் வஞ்சனையால்*  வலைப்படுத்தாய்! முலை உணாயே


    தீய புந்திக் கஞ்சன் உன்மேல்*  சினம் உடையன் சோர்வு பார்த்து* 
    மாயந்தன்னால் வலைப்படுக்கில்*  வாழகில்லேன் வாசுதேவா!*

    தாயர் வாய்ச்சொல் கருமம் கண்டாய்*  சாற்றிச் சொன்னேன் போகவேண்டா* 
    ஆயர் பாடிக்கு அணிவிளக்கே!*  அமர்ந்து வந்து என் முலை உணாயே


    மின் அனைய நுண் இடையார்*  விரி குழல்மேல் நுழைந்த வண்டு* 
    இன் இசைக்கும் வில்லிபுத்தூர்*  இனிது அமர்ந்தாய்! உன்னைக் கண்டார்*

    என்ன நோன்பு நோற்றாள் கொலோ*  இவனைப் பெற்ற வயிறு உடையாள்* 
    என்னும் வார்த்தை எய்துவித்த*  இருடிகேசா! முலை உணாயே (2)


    பெண்டிர் வாழ்வார் நின் ஒப்பாரைப்*  பெறுதும் என்னும் ஆசையாலே* 
    கண்டவர்கள் போக்கு ஒழிந்தார்*  கண்ணிணையால் கலக்க நோக்கி*

    வண்டு உலாம் பூங்குழலினார்*  உன் வாயமுதம் உண்ண வேண்டிக்* 
    கொண்டு போவான் வந்து நின்றார்*  கோவிந்தா நீ முலை உணாயே 


    இரு மலை போல் எதிர்ந்த மல்லர்*  இருவர் அங்கம் எரிசெய்தாய்!*  உன் 
    திரு மலிந்து திகழு மார்வு*  தேக்க வந்து என் அல்குல் ஏறி* 

    ஒரு முலையை வாய்மடுத்து*  ஒரு முலையை நெருடிக்கொண்டு* 
    இரு முலையும் முறை முறையாய்*  ஏங்கி ஏங்கி இருந்து உணாயே


    அங் கமலப் போதகத்தில்*  அணி கொள் முத்தம் சிந்தினாற்போல்* 
    செங் கமல முகம் வியர்ப்ப*  தீமை செய்து இம் முற்றத்தூடே*

    அங்கம் எல்லாம் புழுதியாக*  அளைய வேண்டா அம்ம! விம்ம* 
    அங்கு அமரர்க்கு அமுது அளித்த*  அமரர் கோவே! முலை உணாயே


    ஓட ஓடக் கிண்கிணிகள்*  ஒலிக்கும் ஓசைப் பாணியாலே* 
    பாடிப் பாடி வருகின்றாயைப்*  பற்பநாபன் என்று இருந்தேன்*

    ஆடி ஆடி அசைந்து அசைந்திட்டு*  அதனுக்கு ஏற்ற கூத்தை ஆடி* 
    ஓடி ஒடிப் போய்விடாதே*  உத்தமா! நீ முலை உணாயே


    வார் அணிந்த கொங்கை ஆய்ச்சி*  மாதவா! உண் என்ற மாற்றம்* 
    நீர் அணிந்த குவளை வாசம்*  நிகழ நாறும் வில்லிபுத்தூர்ப்*

    பார் அணிந்த தொல் புகழான்*  பட்டர்பிரான் பாடல் வல்லார்* 
    சீர் அணிந்த செங்கண்மால் மேல்*  சென்ற சிந்தை பெறுவர் தாமே (2)   


    காசை ஆடை மூடி ஓடிக்*  காதல் செய் தானவன் ஊர்* 
    நாசம் ஆக நம்ப வல்ல*  நம்பி நம் பெருமான்* 

    வேயின் அன்ன தோள் மடவார்*  வெண்ணெய் உண்டான் இவன் என்று* 
    ஏச நின்ற எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே* (2)


    தையலாள்மேல் காதல் செய்த*  தானவன் வாள் அரக்கன்* 
    பொய் இலாத பொன் முடிகள்*  ஒன்பதோடு ஒன்றும் அன்று* 

    செய்த வெம் போர் தன்னில்*  அங்கு ஓர் செஞ்சரத்தால் உருள* 
    எய்த எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*     


    முன் ஓர் தூது*  வானரத்தின் வாயில் மொழிந்து*  
    அரக்கன் மன் ஊர் தன்னை*  வாளியினால் மாள முனிந்து*

    அவனே பின் ஓர் தூது*  ஆதிமன்னர்க்கு ஆகி பெருநிலத்தார்* 
    இன்னார் தூதன் என நின்றான்*  எவ்வுள் கிடந்தானே* 


    பந்து அணைந்த மெல்விரலாள்*  பாவைதன் காரணத்தால்* 
    வெந் திறல் ஏறு ஏழும் வென்ற*  வேந்தன் விரி புகழ் சேர்* 

    நந்தன் மைந்தன் ஆக ஆகும்*  நம்பி நம் பெருமான்* 
    எந்தை தந்தை தம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*  


    பாலன் ஆகி ஞாலம் ஏழும் உண்டு*  பண்டு ஆல் இலைமேல்* 
    சால நாளும் பள்ளி கொள்ளும்*  தாமரைக் கண்ணன் எண்ணில்* 

    நீலம் ஆர் வண்டு உண்டு வாழும்*  நெய்தல் அம் தண் கழனி* 
    ஏலம் நாறும் பைம் புறவின்*  எவ்வுள் கிடந்தானே*  


    சோத்தம் நம்பி என்று*  தொண்டர் மிண்டித் தொடர்ந்து அழைக்கும்* 
    ஆத்தன் நம்பி செங்கண் நம்பி*  ஆகிலும் தேவர்க்கு எல்லாம்* 

    மூத்த நம்பி முக்கண் நம்பி என்று*  முனிவர் தொழுது* 
    ஏத்தும் நம்பி எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    திங்கள் அப்பு வான் எரி கால் ஆகி*  திசைமுகனார்* 
    தங்கள் அப்பன் சாமி அப்பன்*  பாகத்து இருந்த*

    வண்டு உண் தொங்கல் அப்பு நீள் முடியான்*  சூழ் கழல் சூடநின்ற* 
    எங்கள் அப்பன் எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே*


    முனிவன் மூர்த்தி மூவர் ஆகி*  வேதம் விரித்து உரைத்த புனிதன்*
    பூவை வண்ணன் அண்ணல்*  புண்ணியன் விண்ணவர்கோன்* 

    தனியன் சேயன் தான் ஒருவன் ஆகிலும்*  தன் அடியார்க்கு இனியன்*
    எந்தை எம் பெருமான்*  எவ்வுள் கிடந்தானே.


    பந்து இருக்கும் மெல் விரலாள்*  பாவை பனி மலராள்* 
    வந்து இருக்கும் மார்வன்*  நீல மேனி மணி வண்ணன்* 

    அந்தரத்தில் வாழும்*  வானோர் நாயகன் ஆய் அமைந்த* 
    இந்திரற்கும் தம் பெருமான்* எவ்வுள் கிடந்தானே*


    இண்டை கொண்டு தொண்டர் ஏத்த*  எவ்வுள் கிடந்தானை* 
    வண்டு பாடும் பைம் புறவின்*  மங்கையர் கோன் கலியன், 

    கொண்ட சீரால் தண் தமிழ் செய் மாலை*  ஈர் ஐந்தும் வல்லார்* 
    அண்டம் ஆள்வது ஆணை*  அன்றேல் ஆள்வர் அமர் உலகே* (2)    


    திண்ணன் வீடு*  முதல் முழுதும் ஆய்,* 
    எண்ணின் மீதியன்*  எம் பெருமான்,*

    மண்ணும் விண்ணும் எல்லாம்*  உடன் உண்ட,*  நம் 
    கண்ணன் கண் அல்லது*  இல்லை ஓர் கண்ணே.


    ஏ பாவம் பரமே*  ஏழ் உலகும்,* 
    ஈ பாவம் செய்து*  அருளால் அளிப்பார் ஆர்,*

    மா பாவம் விட*  அரற்குப் பிச்சை பெய்,* 
    கோபால கோளரி* ஏறு அன்றியே.


    ஏறனை பூவனை*  பூமகள் தன்னை,* 
    வேறுஇன்றி விண் தொழத்*  தன்னுள் வைத்து,*

    மேல் தன்னை மீதிட*  நிமிர்ந்து மண் கொண்ட.* 
    மால் தனின் மிக்கும் ஓர்*  தேவும் உளதே.  


    தேவும் எப் பொருளும் படைக்கப்,* 
    பூவில் நான்முகனைப் படைத்த,*

    தேவன் எம் பெருமானுக்கு அல்லால்,* 
    பூவும் பூசனையும் தகுமே.


    தகும் சீர்த்*  தன் தனி முதலினுள்ளே,* 
    மிகும் தேவும்*  எப் பொருளும் படைக்கத்,*

    தகும் கோலத்*  தாமரைக் கண்ணன் எம்மான்,* 
    மிகும் சோதி*  மேல் அறிவார் எவரே. 


    எவரும் யாவையும்*  எல்லாப் பொருளும்,* 
    கவர்வு இன்றித்*  தன்னுள் ஒடுங்க நின்ற,*

    பவர் கொள் ஞான*  வெள்ளச் சுடர் மூர்த்தி,* 
    அவர் எம் ஆழி*  அம் பள்ளியாரே,  


    பள்ளி ஆல் இலை*  ஏழ் உலகும் கொள்ளும்,* 
    வள்ளல்*  வல் வயிற்றுப் பெருமான்,*

    உள் உள் ஆர் அறிவார்*  அவன் தன்,* 
    கள்ள மாய*  மனக்கருத்தே.


    கருத்தில் தேவும்*  எல்லாப் பொருளும்,* 
    வருத்தித்த*  மாயப் பிரான் அன்றி,*  யாரே

    திருத்தித்*  திண் நிலை மூவுலகும்*  தம்முள் 
    இருத்திக்*  காக்கும் இயல்வினரே. 


    காக்கும் இயல்வினன்*  கண்ண பெருமான்,* 
    சேர்க்கை செய்து*  தன் உந்தியுள்ளே,*

    வாய்த்த திசைமுகன்*  இந்திரன் வானவர்,* 
    ஆக்கினான்*  தெய்வ உலகுகளே.  


    கள்வா எம்மையும்*  ஏழ் உலகும்,*  நின் 
    உள்ளே தோற்றிய*  இறைவ! என்று,*

    வெள் ஏறன் நான்முகன்*  இந்திரன் வானவர்,* 
    புள் ஊர்தி*  கழல் பணிந்து ஏத்துவரே.   


    ஏத்த ஏழ் உலகும் கொண்ட*  கோலக் 
    கூத்தனைக்,*  குருகூர்ச் சடகோபன் சொல்,*

    வாய்த்த ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    ஏத்த வல்லவர்க்கு*  இல்லை ஓர் ஊனமே.