பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    திருத்தாய் செம்போத்தே,!*  
    திருமாமகள் தன்கணவன்,*

    மருத்தார் தொல்புகழ்*  மாதவனை வர*  
    திருத்தாய் செம்போத்தே!  (2)


    கரையாய் காக்கைப்பிள்ளாய்,*  
    கருமாமுகில் போல்நிறத்தன்,*

    உரைஆர் தொல்புகழ்*  உத்தமனை வர*  
    கரையாய் காக்கைப்பிள்ளாய்!  


    கூவாய் பூங்குயிலே,* 
    குளிர்மாரி தடுத்துஉகந்த*

    மாவாய் கீண்ட*  மணிவண்ணனை வர,*
    கூவாய் பூங்குயிலே!


    கொட்டாய் பல்லிக்குட்டி,* 
    குடம்ஆடி உலகுஅளந்த,*

    மட்டுஆர் பூங்குழல்*  மாதவனை வர,*
    கொட்டாய் பல்லிக்குட்டி!  


    சொல்லாய் பைங்கிளியே,* 
    சுடர்ஆழி வலன்உயர்த்த,*

    மல்ஆர் தோள்*  வட வேங்கடவனைவர,*
    சொல்லாய் பைங்கிளியே!  (2) 


    கோழி கூஎன்னுமால்,* 
    தோழி! நான்என்செய்கேன்,*

    ஆழி வண்ணர்*  வரும்பொழுது ஆயிற்று*
    கோழி கூஎன்னுமால். 


    காமற்கு என்கடவேன்,*
    கருமாமுகில் வண்ணற்குஅல்லால்,*

    பூமேல் ஐங்கணை*  கோத்துப் புகுந்துஎய்ய,*
    காமற்கு என்கடவேன்!


    இங்கே போதும்கொலோ,*
    இனவேல்நெடுங் கண்களிப்ப,*

    கொங்குஆர் சோலைக்*  குடந்தைக் கிடந்தமால்,*
    இங்கே போதும்கொலோ!  (2) 


    இன்னார் என்றுஅறியேன்,* 
    அன்னே! ஆழியொடும்,*

    பொன்ஆர் சார்ங்கம் உடைய அடிகளை,*
    இன்னார் என்றுஅறியேன்.   (2)  


    தொண்டீர் பாடுமினோ,* 
    சுரும்புஆர்பொழில் மங்கையர்கோன்,* 

    ஒண்தார் வேல்கலியன் ஒலி மாலைகள்,*
    தொண்டீர்! பாடுமினோ  (2)


    முனியே! நான்முகனே!*  முக்கண்ணப்பா*  என்பொல்லாக்- 
    கனிவாய்த்*  தாமரைக்கண் கருமாணிக்கமே என்கள்வா!*

    தனியேன்ஆர்உயிரே!*  என்தலை மிசையாய் வந்திட்டு* 
    இனிநான் போகல்ஒட்டேன்*  ஒன்றும்மாயம் செய்யேல் என்னையே.   (2)


    மாயம்செய்யேல் என்னை*  உன்திருமார்வத்து மாலைநங்கை* 
    வாசம்செய் பூங்குழலாள்*  திருஆணை நின்ஆணை கண்டாய்*

    நேசம்செய்து உன்னோடு என்னை*  உயிர் வேறுஇன்றி ஒன்றாகவே* 
    கூசம்செய்யாது கொண்டாய்*  என்னைக்கூவிக் கொள்ளாய் வந்துஅந்தோ!


    கூவிக்கொள்ளாய் வந்துஅந்தோ!*  என்பொல்லாக் கருமாணிக்கமே!* 
    ஆவிக்குஓர் பற்றுக்கொம்பு*  நின்அலால் அறிகின்றி லேன்யான்*

    மேவித்தொழும் பிரமன் சிவன்*  இந்திரன் ஆதிக்குஎல்லாம்* 
    நாவிக் கமல முதல்கிழங்கே!*  உம்பர் அந்ததுவே.


    உம்பர்அம்தண் பாழேஓ!*  அதனுள்மிசை நீயேஓ* 
    அம்பரம் நல்சோதி!*  அதனுள் பிரமன் அரன் நீ*

    உம்பரும் யாதவரும் படைத்த*  முனிவன் அவன்நீ* 
    எம்பரம் சாதிக்கலுற்று*  என்னைப்போர விட்டிட்டாயே.  


    போரவிட்டிட்டு என்னை*  நீபுறம்போக்கலுற்றால்*  பின்னையான்- 
    ஆரைக்கொண்டு எத்தைஅந்தோ!*  எனதுஎன்பதுஎன்? யான்என்பதுஎன்?*

    தீர இரும்புஉண்ட நீரதுபோல*  என்ஆர்உயிரை- 
    ஆரப்பருக*  எனக்கு ஆராஅமுதுஆனாயே. 


    எனக்கு ஆராஅமுதாய்*  எனதுஆவியை இன்உயிரை* 
    மனக்குஆராமை மன்னி உண்டிட்டாய்*  இனிஉண்டொழியாய்*

    புனக்காயாநிறத்த*  புண்டரீகக்கண் செங்கனிவாய்* 
    உனக்குஏற்கும் கோலமலர்ப்பாவைக்கு*  அன்பா! என்அன்பேயோ!


    கோல மலர்ப்பாவைக்கு அன்புஆகிய*  என் அன்பேயோ* 
    நீலவரை இரண்டு பிறைகவ்வி*  நிமிர்ந்தது ஒப்ப*

    கோல வராகம்ஒன்றாய்*  நிலம்கோட்டிடைக் கொண்ட எந்தாய்* 
    நீலக் கடல்கடைந்தாய்!*  உன்னைபெற்று இனிப் போக்குவனோ?  (2)


    பெற்றுஇனிப் போக்குவனோ*  உன்னை என் தனிப்பேருயிரை* 
    உற்ற இருவினையாய்*  உயிராய்ப் பயன் ஆவையாய்*

    முற்றஇம் மூவுலகும்*  பெரும்தூறுஆய் தூற்றில்புக்கு* 
    முற்றக் கரந்துஒளித்தாய்!*  என்முதல் தனிவித்தேயோ!


    முதல்தனி வித்தேயோ!*  முழுமூவுலகுஆதிக்கு எல்லாம்* 
    முதல்தனி உன்னைஉன்னை*  எனைநாள் வந்து கூடுவன்நான்?*

    முதல்தனி அங்கும்இங்கும்*  முழுமுற்றுறுவாழ் பாழாய்* 
    முதல்தனி சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவிலீஓ!   


    சூழ்ந்து அகன்றுஆழ்ந்துயர்ந்த*  முடிவில் பெரும் பாழேயோ* 
    சூழ்ந்ததனில் பெரிய*  பரநல் மலர்ச்சோதீயோ*

    சூழ்ந்ததனில் பெரிய*  சுடர்ஞான இன்பமேயோ!*
    சூழ்ந்ததனில் பெரிய*  என் அவாஅறச் சூழ்ந்தாயே!   (2)


    அவாஅறச் சூழ்*  அரியை அயனை அரனை அலற்றி* 
    அவாஅற்று வீடுபெற்ற*  குருகூர்ச் சடகோபன் சொன்ன*

    அவாஇல் அந்தாதிகளால்*  இவைஆயிரமும்*  முடிந்த- 
    அவாஇல் அந்தாதி இப்பத்து அறிந்தார்*  பிறந்தார் உயர்ந்தே.  (2)