பிரபந்த தனியன்கள்
பாசுரங்கள்
வட்டு நடுவே* வளர்கின்ற* மாணிக்க-
மொட்டு நுனையில்* முளைக்கின்ற முத்தே போல்*
சொட்டுச் சொட்டு என்னத்* துளிக்கத் துளிக்க* என்
குட்டன் வந்து என்னைப் புறம்புல்குவான் கோவிந்தன் என்னைப் புறம்புல்குவான்* (2)
கிண்கிணி கட்டிக்* கிறி கட்டிக் கையினிற்*
கங்கணம் இட்டுக்* கழுத்திற் தொடர் கட்டித்*
தன் கணத்தாலே* சதிரா நடந்து வந்து*
என் கண்ணன் என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கத்தக் கதித்துக்* கிடந்த பெருஞ்செல்வம்*
ஒத்துப் பொருந்திக்கொண்டு* உண்ணாது மண் ஆள்வான்*
கொத்துத் தலைவன்* குடிகெடத் தோன்றிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆயர்கள் ஏறு என் புறம்புல்குவான்
நாந்தகம் ஏந்திய* நம்பி சரண் என்று*
தாழ்ந்த தனஞ்சயற்கு ஆகி* தரணியில்*
வேந்தர்கள் உட்க* விசயன் மணித் திண்தேர்*
ஊர்ந்தவன் என்னைப் புறம்புல்குவான் உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
வெண்கலப் பத்திரம் கட்டி* விளையாடிக்*
கண் பல பெய்த* கருந்தழைக் காவின் கீழ்ப்*
பண் பல பாடிப்* பல்லாண்டு இசைப்ப* பண்டு-
மண் பல கொண்டான் புறம்புல்குவான்* வாமனன் என்னைப் புறம்புல்குவான்
சத்திரம் ஏந்தித்* தனி ஒரு மாணியாய்*
உத்தர வேதியில்* நின்ற ஒருவனைக்*
கத்திரியர் காணக்* காணி முற்றும் கொண்ட*
பத்திராகாரன் புறம்புல்குவான்* பார் அளந்தான் என் புறம்புல்குவான்
பொத்த உரலைக் கவிழ்த்து* அதன்மேல் ஏறி*
தித்தித்த பாலும்* தடாவினில் வெண்ணெயும்*
மெத்தத் திருவயிறு* ஆர விழுங்கிய*
அத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்* ஆழியான் என்னைப் புறம்புல்குவான்
மூத்தவை காண* முது மணற்குன்று ஏறிக்*
கூத்து உவந்து ஆடிக்* குழலால் இசை பாடி*
வாய்த்த மறையோர் வணங்க* இமையவர்-
ஏத்த வந்து என்னைப் புறம்புல்குவான்* எம்பிரான் என்னைப் புறம்புல்குவான்
கற்பகக் காவு* கருதிய காதலிக்கு*
இப்பொழுது ஈவன் என்று* இந்திரன் காவினில்*
நிற்பன செய்து* நிலாத் திகழ் முற்றத்துள்*
உய்த்தவன் என்னைப் புறம்புல்குவான்* உம்பர்கோன் என்னைப் புறம்புல்குவான்
ஆய்ச்சி அன்று ஆழிப் பிரான்* புறம்புல்கிய*
வேய்த் தடந்தோளி சொல்* விட்டுசித்தன் மகிழ்ந்து*
ஈத்த தமிழ் இவை* ஈரைந்தும் வல்லவர்*
வாய்த்த நன்மக்களைப் பெற்று* மகிழ்வரே (2)
கண் ஆர் கடல் சூழ்* இலங்கைக்கு இறைவன்தன்*
திண் ஆகம் பிளக்கச்* சரம் செல உய்த்தாய்!*
விண்ணோர் தொழும்* வேங்கட மா மலை மேய*
அண்ணா அடியேன்* இடரைக் களையாயே.
இலங்கைப் பதிக்கு* அன்று இறை ஆய*
அரக்கர் குலம் கெட்டு அவர் மாள* கொடிப் புள் திரித்தாய்!*
விலங்கல் குடுமித்* திருவேங்கடம் மேய*
அலங்கல் துளப முடியாய்!* அருளாயே.
நீர் ஆர் கடலும்* நிலனும் முழுது உண்டு*
ஏர் ஆலம் இளந் தளிர்மேல்* துயில் எந்தாய்!*
சீர் ஆர்* திருவேங்கட மா மலை மேய*
ஆரா அமுதே!* அடியேற்கு அருளாயே.
உண்டாய் உறிமேல்* நறு நெய் அமுது ஆக*
கொண்டாய் குறள் ஆய்* நிலம் ஈர் அடியாலே*
விண் தோய் சிகரத்* திருவேங்கடம் மேய,
அண்டா!* அடியேனுக்கு அருள்புரியாயே.
தூண் ஆய் அதனூடு* அரியாய் வந்து தோன்றி*
பேணா அவுணன் உடலம்* பிளந்திட்டாய்!*
சேண் ஆர் திருவேங்கட* மா மலை மேய,*
கோள் நாகணையாய்!* குறிக்கொள் எனை நீயே.
மன்னா* இம் மனிசப் பிறவியை நீக்கி*
தன் ஆக்கி* தன் இன் அருள் செய்யும் தலைவன்*
மின் ஆர் முகில் சேர்* திருவேங்கடம் மேய*
என் ஆனை என் அப்பன்* என் நெஞ்சில் உளானே.
மான் ஏய் மட நோக்கி* திறத்து எதிர் வந்த*
ஆன் ஏழ் விடை செற்ற* அணி வரைத் தோளா!*
தேனே!* திருவேங்கட மா மலை மேய*
கோனே! என் மனம்* குடிகொண்டு இருந்தாயே.
சேயன் அணியன்* என சிந்தையுள் நின்ற*
மாயன் மணி வாள் ஒளி* வெண் தரளங்கள்*
வேய் விண்டு உதிர்* வேங்கட மா மலை மேய*
ஆயன் அடி அல்லது* மற்று அறியேனே.
வந்தாய் என் மனம் புகுந்தாய்* மன்னி நின்றாய்*
நந்தாத கொழுஞ் சுடரே* எங்கள் நம்பீ!*
சிந்தாமணியே* திருவேங்கடம் மேய எந்தாய்!*
இனி யான் உனை* என்றும் விடேனே.
வில்லார் மலி* வேங்கட மா மலை மேய*
மல்லார் திரள்தோள்* மணி வண்ணன் அம்மானைக்*
கல்லார் திரள்தோள்* கலியன் சொன்ன மாலை*
வல்லார் அவர்* வானவர் ஆகுவர் தாமே.
பொருமா நீள் படை* ஆழி சங்கத்தொடு,*
திருமா நீள் கழல்* ஏழ் உலகும் தொழ,*
ஒரு மாணிக் குறள் ஆகி,* நிமிர்ந்த,* அக்
கரு மாணிக்கம்* என் கண்ணுளது ஆகுமே.
கண்ணுள்ளே நிற்கும்* காதன்மையால் தொழில்,*
எண்ணிலும் வரும்* என் இனி வேண்டுவம்?*
மண்ணும் நீரும்* எரியும் நல் வாயுவும்*
விண்ணும் ஆய் விரியும்* எம் பிரானையே.
எம்பிரானை* எந்தை தந்தை தந்தைக்கும்-
தம்பிரானை,* தண் தாமரைக் கண்ணனை,*
கொம்பு அராவு* நுண் நேர் இடை மார்பனை,*
எம்பிரானைத் தொழாய்* மட நெஞ்சமே.
நெஞ்சமே நல்லை நல்லை* உன்னைப் பெற்றால்-
என் செய்யோம்?* இனி என்ன குறைவினம்?*
மைந்தனை மலராள்* மணவாளனைத்,*
துஞ்சும்போதும்* விடாது தொடர்கண்டாய்.
கண்டாயே நெஞ்சே* கருமங்கள் வாய்க்கின்று,* ஓர்
எண் தானும் இன்றியே* வந்து இயலுமாறு,*
உண்டானை* உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானைக்,* கண்டுகொண்டனை நீயுமே.
நீயும் நானும்* இந் நேர்நிற்கில்,* மேல்மற்றோர்.
நோயும் சார்கொடான்* நெஞ்சமே சொன்னேன்,*
தாயும் தந்தையும் ஆய்* இவ் உலகினில்,*
வாயும் ஈசன்* மணிவண்ணன் எந்தையே.
எந்தையே என்றும்* எம் பெருமான் என்றும்,*
சிந்தையுள் வைப்பன்* சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று* வானவர்,*
சிந்தையுள் வைத்துச்* சொல்லும் செல்வனையே.
செல்வ நாரணன் என்ற* சொல் கேட்டலும்,*
மல்கும் கண்பனி* நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்* இடைவீடு இன்றி,*
நல்கி என்னை விடான்* நம்பி நம்பியே.
நம்பியை* தென் குறுங்குடி நின்ற,* அச்
செம்பொனே திகழும்* திரு மூர்த்தியை,*
உம்பர் வானவர்* ஆதி அம் சோதியை,*
எம் பிரானை* என் சொல்லி மறப்பனோ?
மறப்பும் ஞானமும்* நான் ஒன்று உணர்ந்திலன்,*
மறக்கும் என்று* செந்தாமரைக் கண்ணொடு,*
மறப்பு அற என் உள்ளே* மன்னினான் தன்னை,*
மறப்பனோ? இனி* யான் என் மணியையே.
மணியை வானவர் கண்ணனை* தன்னது ஓர்-
அணியை,* தென் குருகூர்ச் சடகோபன்,* சொல்
பணிசெய் ஆயிரத்துள்* இவை பத்துடன்,*
தணிவிலர் கற்பரேல்,* கல்வி வாயுமே.