பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
கறவா மட நாகு* தன் கன்று உள்ளினால்போல்*
மறவாது அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
நறவு ஆர் பொழில் சூழ்* நறையூர் நின்ற நம்பி*
பிறவாமை எனைப் பணி* எந்தை பிரானே!*
வற்றா முதுநீரொடு* மால் வரை ஏழும்*
துற்று ஆக முன் துற்றிய* தொல் புகழோனே*
அற்றேன் அடியேன்* உன்னையே அழைக்கின்றேன்*
பெற்றேன் அருள் தந்திடு* என் எந்தை பிரானே!*
தாரேன் பிறர்க்கு* உன் அருள் என்னிடை வைத்தாய்*
ஆரேன் அதுவே* பருகிக் களிக்கின்றேன்*
கார் ஏய் கடலே மலையே* திருக்கோட்டி*
ஊரே உகந்தாயை* உகந்து அடியேனே*.
புள் வாய் பிளந்த* புனிதா! என்று அழைக்க*
உள்ளே நின்று* என் உள்ளம் குளிரும் ஒருவா!*
கள்வா!* கடல்மல்லைக் கிடந்த கரும்பே*
வள்ளால்! உன்னை* எங்ஙனம் நான் மறக்கேனே*
வில் ஏர் நுதல்* நெடுங் கண்ணியும் நீயும்*
கல் ஆர் கடுங் கானம்* திரிந்த களிறே*
நல்லாய் நர நாரணனே!* எங்கள் நம்பி*
சொல்லாய் உன்னை* யான் வணங்கித் தொழும் ஆறே *
பனி ஏய் பரங் குன்றின்* பவளத் திரளே*
முனியே* திருமூழிக்களத்து விளக்கே*
இனியாய் தொண்டரோம்* பருகும் இன் அமுது ஆய
கனியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*.
கதியேல் இல்லை* நின் அருள் அல்லது எனக்கு*
நிதியே!* திருநீர்மலை நித்திலத் தொத்தே*
பதியே பரவித் தொழும்* தொண்டர் தமக்குக்
கதியே* உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே*
அத்தா! அரியே! என்று* உன்னை அழைக்க *
பித்தா என்று பேசுகின்றார்* பிறர் என்னை*
முத்தே! மணி மாணிக்கமே!* முளைக்கின்ற
வித்தே* உன்னை எங்ஙனம் நான் விடுகேனே!*
தூயாய்! சுடர் மா மதிபோல்* உயிர்க்கு எல்லாம்*
தாய் ஆய் அளிக்கின்ற* தண் தாமரைக் கண்ணா!*
ஆயா! அலை நீர் உலகு ஏழும்* முன் உண்ட
வாயா* உன்னை எங்ஙனம் நான் மறக்கேனே?*
வண்டு ஆர் பொழில் சூழ்* நறையூர் நம்பிக்கு* என்றும்-
தொண்டு ஆய்* கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*
தொண்டீர்! இவை பாடுமின்* பாடி நின்று ஆட*
உண்டே விசும்பு* உம்தமக்கு இல்லை துயரே* (2)
உள் நிலாவிய ஐவரால் குமைதீற்றி* என்னை உன் பாதபங்கயம்,*
நண்ணிலாவகையே* நலிவான் இன்னும் எண்ணுகின்றாய்,*
எண் இலாப் பெறுமாயனே! இமையோர்கள் ஏத்தும்* உலகம் மூன்று உடை,*
அண்ணலே! அமுதே! அப்பனே!* என்னை ஆள்வானே! (2)
என்னை ஆளும் வன் கோ ஓர் ஐந்து இவை பெய்து* இராப்பகல் மோதுவித்திட்டு,*
உன்னை நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
கன்னலே! அமுதே! கார் முகில் வண்ணனே!* கடல் ஞாலம் காக்கின்ற*
மின்னு நேமியினாய்!* வினையேனுடை வேதியனே!
வேதியாநிற்கும் ஐவரால்* வினையேனை மோதுவித்து* உன் திருவடிச்
சாதியாவகை* நீ தடுத்து என் பெறுதிஅந்தோ,*
ஆதி ஆகி அகல் இடம் படைத்து* உண்டு உமிழ்ந்து கடந்து இடந்திட்ட-
சோதி நீள் முடியாய்!* தொண்டனேன் மதுசூதனனே!
சூது நான் அறியாவகை* சுழற்றி ஓர் ஐவரைக் காட்டி* உன் அடிப்போது-
நான் அணுகாவகை* செய்து போதிகண்டாய்,*
யாதும் யாவரும் இன்றி நின் அகம்பால் ஒடுக்கி* ஓர் ஆலின் நீள் இலை,*
மீது சேர் குழவி!* வினையேன் வினைதீர் மருந்தே!
தீர் மருந்து இன்றி ஐந்து நோய்* அடும் செக்கில் இட்டுத் திரிக்கும் ஐவரை,*
நேர் மருங்கு உடைத்தா அடைத்து* நெகிழ்ப்பான் ஒக்கின்றாய்,*
ஆர் மருந்து இனி ஆகுவார்?* அடல் ஆழி ஏந்தி அசுரர் வன் குலம்,*
வேர் மருங்கு அறுத்தாய்!* விண்ணுளார் பெருமானே? ஓ!
விண்ணுளார் பெருமாற்கு அடிமை செய்வாரையும் செறும்* ஐம்புலன் இவை,
மண்ணுள் என்னைப் பெற்றால்* என் செய்யா மற்று நீயும் விட்டால்?*
பண்ணுளாய் கவி தன்னுளாய்!* பத்தியின் உள்ளாய்! பரமீசனே,* வந்து என்-
கண்ணுளாய்! நெஞ்சுளாய்! சொல்லுளாய்! ஒன்று சொல்லாயே.
ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத* ஓர் ஐவர் வன் கயவரை,*
என்று யான் வெல்கிற்பன்* உன் திருவருள் இல்லையேல்?,*
அன்று தேவர் அசுரர் வாங்க* அலைகடல் அரவம் அளாவி,* ஓர்
குன்றம் வைத்த எந்தாய்!* கொடியேன் பருகு இன் அமுதே!
இன் அமுது எனத் தோன்றி* ஓர் ஐவர் யாவரையும் மயக்க,* நீ வைத்த-
முன்னம் மாயம் எல்லாம்* முழு வேர் அரிந்து* என்னை உன்-
சின்னமும் திரு மூர்த்தியும்* சிந்தித்து ஏத்திக் கைதொழவே அருள் எனக்கு,*
என் அம்மா! என் கண்ணா!* இமையோர் தம் குலமுதலே !
குலம் முதல் அடும் தீவினைக்* கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை*
வலம் முதல் கெடுக்கும்* வரமே தந்தருள்கண்டாய்,*
நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்* நிற்பன செல்வன எனப்,* பொருள்-
பல முதல் படைத்தாய்!* என் கண்ணா! என் பரஞ்சுடரே!
என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி* உன் இணைத் தாமரைகட்கு,*
அன்பு உருகி நிற்கும்* அது நிற்க சுமடு தந்தாய்,*
வன் பரங்கள் எடுத்து ஐவர்* திசை திசை வலித்து எற்றுகின்றனர்:*
முன் பரவை கடைந்து* அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!
கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்* குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,* அப்
புண்டரீகக் கொப்பூழ்ப்* புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
தொண்டர் தொண்டர் தொண்டன்* சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,*
கண்டு பாட வல்லார்* வினை போம் கங்குலும் பகலே. (2)