பிரபந்த தனியன்கள்
பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம்
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம்
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும்,
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள்
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும்,
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும்
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும்
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன்,
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும்,
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த
இதத்தாய் இராமுனுசன்.
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும்,
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன்,
யாழினிசை வேதத் தியல்.
பாசுரங்கள்
வண்டு உணும் நறு மலர் இண்டை கொண்டு* பண்டை நம் வினை கெட என்று* அடிமேல்
தொண்டரும் அமரரும் பணிய நின்று* அங்கு அண்டமொடு அகல்இடம் அளந்தவனே*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர் அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
அண்ணல் செய்து அலை கடல் கடைந்து* அதனுள் கண்ணுதல் நஞ்சு உண்ணக்கண்டவனே!*
விண்ணவர் அமுது உண அமுதில் வரும்* பெண் அமுது உண்ட எம் பெருமானே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
குழல் நிற வண்ண நின்கூறு கொண்ட* தழல் நிற வண்ணன் நண்ணார் நகரம்
விழ* நனி மலை சிலை வளைவு செய்து* அங்கு அழல் நிற அம்புஅதுஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
நிலவொடு வெயில் நிலவு இரு சுடரும்* உலகமும் உயிர்களும் உண்டு ஒருகால்*
கலை தரு குழவியின் உருவினை ஆய்* அலை கடல் ஆல் இலை வளர்ந்தவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
பார் எழு கடல் எழு மலை எழும் ஆய்* சீர் கெழும் இவ் உலகு ஏழும் எல்லாம்*
ஆர் கெழு வயிற்றினில் அடக்கி நின்று* அங்கு ஓர் எழுத்து ஓர் உரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்,
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
கார் கெழு கடல்களும் மலைகளும் ஆய்* ஏர் கெழும் உலகமும் ஆகி* முத
லார்களும் அறிவு அரும் நிலையினை ஆய்* சீர் கெழு நான்மறை ஆனவனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
உருக்கு உறு நறு நெய் கொண்டு ஆர் அழலில்* இருக்கு உறும் அந்தணர் சந்தியின்வாய்*
பெருக்கமொடு அமரர்கள் அமர நல்கும்* இருக்கினில் இன் இசை ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
காதல் செய்து இளையவர் கலவி தரும்* வேதனை வினை அது வெருவுதல் ஆம்*
ஆதலின் உனது அடி அணுகுவன் நான்!* போது அலர் நெடுமுடிப் புண்ணியனே!*
ஆண்டாய் உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே.
சாதலும் பிறத்தலும் என்று இவற்றைக்* காதல் செய்யாது உன கழல் அடைந்தேன்*
ஓதல் செய் நான்மறை ஆகி* உம்பர் ஆதல் செய் மூவுரு ஆனவனே!*
ஆண்டாய்! உனைக் காண்பது ஓர்* அருள் எனக்கு அருளுதியேல்*
வேண்டேன் மனைவாழ்க்கையை* விண்ணகர் மேயவனே!
பூ மரு பொழில் அணி* விண்ணகர் மேல்*
காமரு சீர்க்* கலிகன்றி சொன்ன*
பா மரு தமிழ்* இவை பாட வல்லார்*
வாமனன் அடி* இணை மருவுவரே*
வைகல் பூங் கழிவாய்* வந்து மேயும் குருகினங்காள்*
செய் கொள் செந்நெல் உயர்* திருவண்வண்டூர் உறையும்*
கை கொள் சக்கரத்து* என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
கைகள் கூப்பி சொல்லீர்* வினையாட்டியேன் காதன்மையே*. (2)
காதல் மென் பெடையோடு* உடன் மேயும் கரு நாராய்*
வேத வேள்வி ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
நாதன் ஞாலம் எல்லாம் உண்ட* நம் பெருமானைக் கண்டு*
பாதம் கைதொழுது பணியீர்* அடியேன் திறமே*.
திறங்கள் ஆகி எங்கும்* செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்*
சிறந்த செல்வம் மல்கு* திருவண்வண்டூர் உறையும்*
கறங்கு சக்கரக் கைக்* கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
இறங்கி நீர் தொழுது பணியீர்* அடியேன் இடரே*
இடர் இல் போகம் மூழ்கி* இணைந்து ஆடும் மட அன்னங்காள்!*
விடல் இல் வேத ஒலி முழங்கும்* தண் திருவண்வண்டூர்*
கடலின் மேனிப்பிரான்* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
உடலம் நைந்து ஒருத்தி* உருகும் என்று உணர்த்துமினே*
உணர்த்தல் ஊடல் உணர்ந்து* உடன் மேயும் மட அன்னங்காள்*
திணர்த்த வண்டல்கள்மேல்* சங்கு சேரும் திருவண்வண்டூர்*
புணர்த்த பூந் தண் துழாய்முடி* நம் பெருமானைக் கண்டு*
புணர்த்த கையினராய்* அடியேனுக்கும் போற்றுமினே*
போற்றி யான் இரந்தேன்* புன்னைமேல் உறை பூங் குயில்காள்*
சேற்றில் வாளை துள்ளும்* திருவண்வண்டூர் உறையும்*
ஆற்றல் ஆழி அங்கை* அமரர் பெருமானைக் கண்டு*
மாற்றம் கொண்டருளீர்* மையல் தீர்வது ஒருவண்ணமே*
ஒருவண்ணம் சென்று புக்கு* எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே*
செரு ஒண் பூம் பொழில் சூழ்* செக்கர் வேலைத் திருவண்வண்டூர்*
கரு வண்ணம் செய்யவாய்* செய்ய கண் செய்ய கை செய்யகால்*
செரு ஒண் சக்கரம் சங்கு* அடையாளம் திருந்தக் கண்டே*.
திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்* ஒண் சிறு பூவாய்*
செருந்தி ஞாழல் மகிழ்* புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
பெரும் தண் தாமரைக்கண்* பெரு நீள் முடி நால் தடந்தோள்*
கருந் திண் மா முகில் போல்* திருமேனி அடிகளையே*
அடிகள் கைதொழுது* அலர்மேல் அசையும் அன்னங்காள்*
விடிவை சங்கு ஒலிக்கும்* திருவண்வண்டூர் உறையும்*
கடிய மாயன் தன்னை* கண்ணனை நெடுமாலைக் கண்டு*
கொடிய வல்வினையேன்* திறம் கூறுமின் வேறுகொண்டே*
வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்* வெறி வண்டினங்காள்*
தேறு நீர்ப் பம்பை* வடபாலைத் திருவண்வண்டூர்*
மாறு இல் போர் அரக்கன்* மதிள் நீறு எழச் செற்று உகந்த*
ஏறு சேவகனார்க்கு* என்னையும் உளள் என்மின்களே*
மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்* அகல் ஞாலம் கொண்ட*
வன் கள்வன் அடிமேல்* குருகூர்ச் சடகோபன் சொன்ன*
பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்* திருவண்வண்டூர்க்கு*
இன்கொள் பாடல் வல்லார்* மதனர் மின்னிடை யவர்க்கே* (2)